மே மாதம் வரை ஊரடங்கை நீட்டித்து பிரான்ஸ் அதிபர் உத்தரவு!

Default Image

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் நோயானது லட்சக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. இந்த வைரஸ் நோய் முதலில் சீனாவில் தொடங்கி, தொடர்ந்து 210 நாடுகளை பாதித்துள்ளது.
இந்நிலையில், ஐரோப்பிய நாடான பிரான்சில், ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 779 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 14 ஆயிரத்து 967 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தொற்று இந்த நாட்டில் கண்டறியப்பட்ட நாள் முதல் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல், கொரோனாவின் தீவிரம் இன்னும் குறையாத நிலையில் நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு மே மாதம்  11-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.
பிற ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான எல்லைகளும் அடுத்த உத்தரவு வரும் வரை தொடர்ந்து மூடியே இருக்கவும் என்றும், மே 11-ம் தேதி புதிய கட்டம் தொடங்கும். அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருக்கும் எனவும் அப்போதைய நிலைமையின் அடிப்படையில் விதிமுறைகள் வகுக்கப்படும் என்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
Arvind Kejriwal - Atishi
L2E EMPURAAN
Arvind Kejriwal - Manish sisodia
Seethalakshmi - NOTA
Virat kohli - Harbajan singh - Shreyas Iyer
prison break rashid khan