இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்ட பயணிகளுக்கு பிரான்ஸ் நாட்டிற்கு வருவதற்கு அந்நாடு அனுமதி அளித்துள்ளது.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அதேசமயம், சில நாட்களுக்கு முன்பு ஐரோப்பிய யூனியன் நாடுகள் தங்கள் நாடுகளுக்குள் வருவதற்கு அனுமதிக்கப்பட்ட தடுப்பூசிகளின் பட்டியலை வெளியிட்டது. இதில் ஐரோப்பாவில் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி மட்டுமே இருந்தது.
இதனால் இந்தியா இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தது. இதனை அடுத்து இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களை அனுமதிக்க பல்வேறு ஐரோப்பிய யூனியன் நாடுகள் ஒப்புக்கொண்டது.
தற்போது பிரான்ஸ் பிரதமர் ஜீன் கேஸ்டக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வெளிநாடுகளிலிருந்து பிரான்ஸ் நாட்டுக்கு வருபவர்கள் அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசியால் உருவாக்கப்பட்ட இந்தியாவில் தயாரிக்கும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவர். மேலும், டெல்டா வகை கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக எல்லைகளில் பரிசோதனை கடுமையாக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
பிரிட்டன் மற்றும் ஸ்வீடன் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி அஸ்ட்ரா ஜெனேகா. இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் ஒன்றான சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…