France Declares Emergency [file image]
சென்னை: பிரான்ஸின் நியூ கலிடோனியாவில் நடந்த கலவரத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இதனால், அவசரநிலையை பிறப்பித்தது அந்நாட்டு அரசாங்கம்.
பாரிஸில் நேற்றைய தினம் புதியதாக ஏற்றப்பட்ட மசோதாவுக்கு எதிராக கலவரம் வெடித்தது. தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான கலவரத்தில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டபோது, கனக் என்ற இளம் பழங்குடியினரை சேர்ந்த மூன்று பேரும், ஒரு போலீஸ் அதிகாரியும் உயிரிழந்தனர்.
இதனையடுத்து, பசிபிக் தீவான நியூ கலிடோனியாவில் இன்று அவசரகால உத்தரவை பிறப்பித்தது பிரான்ஸ் அரசு. அதன்படி, இன்று காலை 5 மணிக்கு (1800 GMT) அமலுக்கு வந்த இந்த அவசரகாலச் சட்டம், பிரெஞ்சு ஆட்சிக்குட்பட்ட தீவில் மக்கள் கூட்டமாக நடமாடுவதைத் தடுப்பதற்கு அந்நாட்டு அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
அந்த உத்தரவின்படி, நியூ கலிடோனியாவில் குறைந்தது 12 நாட்களுக்கு அவசரகால நிலை அமலில் இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில், தலைநகரில் ஏற்கனவே பள்ளிகள் மூடப்பட்டு ஊரடங்கு உத்தரவில் உள்ளது. இதனால், அங்கு ஒரு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வருகிறது. நீட் தேர்வு, கிராமப்புற மற்றும்…
பஞ்சாப் : நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நான்காவது தோல்வியைச் சந்தித்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில்…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் இலக்கியத்தில் முக்கிய பங்கு வகித்தவருமான குமரி அனந்தன்,…
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…