இலங்கையின் முன்னாள் மந்திரி கொரோனாவால் உயிரிழப்பு..!

Published by
Sharmi

கொரோனாவால் இலங்கையின் முன்னாள் மந்திரி மங்கல சமரவீரா இன்று உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இலங்கையின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி மங்கல சமரவீரா(65) இன்று கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளார்.  ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் கொழும்புவில் உள்ள லங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு இவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடுமையான கொரோனா தொற்று காரணமாக இன்று அவர் உயிரிழந்துள்ளார்.

மங்கல சமரவீரா கடந்த 2005 முதல் 2007 மற்றும் 2015 முதல் 2017 ஆம் ஆண்டுகளில் இலங்கையின் வெளியுறவுத்துறை மந்திரியாக பதவி வகித்தவர். மேலும், தாராளவாத ஜனநாயக அரசியலின் ஆதரவாளரான இவர் பல்வேறு முக்கிய பதவிகள் வகித்தவர்.

கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் நிதி அமைச்சகம் முதற்கொண்டு பல முக்கிய துறைகளில் இவர் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் கடந்த வருடம் அரசியலில் இருந்து விலகியுள்ளார்.

Recent Posts

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு…இன்று வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா தாக்கல்!

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு…இன்று வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா தாக்கல்!

டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த…

12 minutes ago

LSG vs PBKS : சொந்த மண்ணில் வீழ்ந்தது லக்னோ! 17வது ஓவரில் பஞ்சாப் அசத்தல் வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…

8 hours ago

LSG vs PBKS : தட்டுத்தடுமாறி டார்கெட் வைத்த லக்னோ! பஞ்சாப் ஜெயிக்க 172 ரன்கள் தேவை.!

லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…

9 hours ago

LSG vs PBKS : லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு!

லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…

11 hours ago

வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…

சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…

12 hours ago

“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!

லக்னோ :  தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…

13 hours ago