1997-ஆம் ஆண்டு விஐபி அறையில் வைத்து பாலியல் ரீதியாக டிரம்ப் துன்புறுத்தினார் – முன்னாள் மாடல் புகார்

Default Image

  யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக முன்னாள் மாடல் ஆமி டோரிஸ்  தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக இருந்து வரும் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.தற்போது அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.இதற்கான தேர்தல் பிரச்சாரங்கள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே தான்  முன்னாள் மாடல் அழகியான ஆமி டோரிஸ் டொனால்ட் டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தனியார் பத்திரிக்கையின் நேர்காணலில் கலந்துகொண்டார்.

அப்பொழுது அவர் கூறுகையில்,1997 -ஆம் நடைபெற்ற யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார்.அங்குள்ள விஐபி அறையில் வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார்.டிரம்ப் தன்னை  முத்தமிட்டார் என்றும்  முழுவதுமாக நான் ட்ரம்பின் பிடியில் இருந்தேன் என்றும்  என்னால் அதிலிருந்து  வெளியேற முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.  இந்த சம்பவம் நடைபெற்றபோது தனக்கு  24 வயது என்றும் டிரம்பிற்கு 51 வயது என்றும் ஆமி டோரிஸ் தெரிவித்துள்ளார். ஆனால் டோரிஸின் இந்த குற்றச்சாட்டுகளை டிரம்பின் வழக்கறிஞர்கள் மறுத்துள்ளனர்.அதாவது ,ஊடகத்தில் வெளியாகியுள்ள ஆமி டோரிஸ் கூறியது  நம்பமுடியாதது என்று தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்