ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி அஷ்ரப் கனி,தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் நேற்று முதல் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக,ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆளும் அரசுக்கு எதிரான தொடர் தாக்குதலில் தாலிபான்கள் ஈடுபட்டு வந்தனர்.இதனையடுத்து,தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியது.
இதற்கிடையில்,ஆப்கானிஸ்தான் அதிபராக இருந்த அஷ்ரப் கனி ஆகஸ்ட் 15 அன்று காபூலை விட்டு வெளியேறினார்.பின்னர் கனி ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு தப்பிச் சென்றார்.மேலும்,லட்சக்கணக்கான ஆப்கன் மக்களும் தலிபான்களின் ஆட்சிக்கு அஞ்சி வெளியேறினர்.
இந்நிலையில்,தலிபானின் அங்கீகாரத்திற்கான அழைப்பு அவரது பக்கத்திலிருந்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.மேலும்,கனியின் கணக்கிலிருந்து வந்த ஃபேஸ்புக் பதிவு சர்வதேச சமூகமானது சன்னி பஷ்டூன் குழுவின் இயக்கத்திற்கு உதவவும், ஆப்கானிஸ்தான் சொத்துக்களை முடக்கவும் வலியுறுத்தியதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதனைத் தொடர்ந்து,ஆப்கானிஸ்தானின் முன்னாள் தலைவர் அஷ்ரப் கனி,தனது ஃபேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக கூறியுள்ளார். எனவே,தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வரும் பதிவுகளையோ பகிர்வுகளையோ மக்கள் நம்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“எனது முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதை மீட்டெடுக்கும் வரை, நேற்றிலிருந்து ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட உள்ளடக்கம் இனி செல்லுபடியாகாது”,என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…