சீனாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!-4 மாத குழந்தையை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த தாய்..!

Published by
Sharmi

சீனாவில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதில் சீனத்தாய் ஒருவர் தனது 4 மாத குழந்தையை காப்பாற்றிவிட்டு இடிபாடுகளில் உயிரிழந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பெய்துள்ள கனமழையால் இதன் தலைநகரமான ஜெங்கோ மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக இருப்பதால் போக்குவரத்தும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது.

இந்த வெள்ளத்தால் 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காணாமல் போனவர்களை தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளது. இதனால் இடிபாடுகளில் சிக்கியவர்களையும் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுபோன்ற கட்டிட இடிபாடுகளில் தாயும் 4 மாத குழந்தையும் சிக்கி தவித்துள்ளனர்.

மீட்பு படையை பார்த்த தாய், எப்படியாவது குழந்தையை காப்பாற்றிவிட துணிந்துள்ளார். தாய் குழந்தையை அங்கிருந்த மீட்பு படையினரிடம் தூக்கி எறிந்துவிட்டு இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளார். குழந்தையை காப்பாற்றி விட்டு உயிரை நீத்த தாயின் செயல் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Published by
Sharmi

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

5 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

5 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

5 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

5 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

5 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

5 hours ago