சொகுசு கப்பலில் முதலிரவுக்காக சென்ற தம்பதிகள் அடுத்த நாள் காலையில் காயங்கள் இன்றி பிணமாக மீட்கப்பட்டுள்ளனர்.
பொதுவாகவே இளம் தம்பதிகள் தங்களது முதலிரவை சுவாரஸ்யமாகவும் வித்தியாசமான இடத்திலும் கொண்டாட விரும்புவது வழக்கம். இந்நிலையில் தற்போதும் அதே போல ஒரு சம்பவம் நடந்துள்ளது, ஆனால் அது அவர்களது வாழ்க்கையே முடித்துள்ளது. ஜெர்மன் நாட்டில் அண்மையில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடிகள் தங்களது முதல் இரவுக்காக வித்தியாசமாக சொகுசு கப்பல் ஒன்றை புக் செய்து அதில் சென்றுள்ளனர். தம்பதிகள் இரவு முழுவதும் அவர்களுடைய அறையில் கதவு பூட்டிய வண்ணமே இருந்துள்ளனர்.இந்நிலையில் கப்பலின் அறையிலிருந்து பகலிலும் கூட தம்பதிகள் வெளியில் வராததால் ஊழியர்கள் சந்தேகத்துடன் அறைக்கதவை தட்டி உள்ளனர்.
வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் ஏதும் பிரச்சனையாக இருக்கக் கூடும் என்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நிர்வாணமாக புதுமண தம்பதிகள் இருவரும் காயங்களின்றி இறந்து கிடந்தனர். இதனையடுத்து உடனடியாக தரைப் பகுதிக்கு வந்த கப்பல் ஊழியர்கள் இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவர்களது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…