அமெரிக்காவில் இறுதிச்சடங்கு வீட்டுக்கு வெளியில் நடந்த துப்பாக்கி சூடு – 14 பேர் படுகாயம்!

Default Image

சிகாகோவில் நடந்த இருத்திசடங்கு வீட்டின் அருகில் நடந்த துப்பாக்கி சூட்டில் 14 பேர் படுகாயம்.

அமெரிக்காவிலுள்ள மாநகரங்களில் ஒன்றான சிகாகோவில் இறுதிச்சடங்கு ஒன்று நடைபெற்றுள்ளது. அப்பொழுது எதிர்பாராதவிதமாக அங்கு வந்த மர்ம நபர்கள் மூலமாக வெடித்த துப்பாக்கி குண்டுகளால் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட 14 பேர் காயமடைந்துள்ளனர். உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இந்நிலையில், இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியது யார்? என்பது குறித்து தீவிரமாக சிகாகோ போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். இறுதிச்சடங்கில் கலந்துகொண்டவர்கள் தவிர மற்றவர்கள் யாரும்  காயமடையவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். அதிகாரம் இல்லாத சிலரின் கைகளில் துப்பாக்கி இருப்பதாகவும் அப்படிப்பட்டவர்கள் இந்த சம்பவத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் போலீசார் கூறியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களில் 25 முதல் 38 வயதிற்குள் உள்ள 4 பெண்கள் உள்ளடங்கியுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்