ஜப்பானின் புகுயோகா நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து “ஆல் நிப்பான் ஏர்வேஸ்” நிறுவனத்துக்கு சொந்தமான “போயிங் 767” ரக விமானம் ஓன்று தலைநகர் டோக்கியோவிற்கு புறப்பட்டு சென்றது.
இந்த விமானத்தில் மொத்தமாக 278 பயணிகள் பயணம் செய்தனர். இந்த விமானம் புறப்பட்டு சென்ற ஒரு மணி நேரத்திற்கு பின் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது விமானத்தின் என்ஜினில் திடீரென தீப்பிடித்தது.
இதனால் விமானத்தில் இருந்த அனைத்து பயணிகள் மத்தியில் பதற்றமும் , பீதியும் ஏற்பட்டது. இதை தொடர்ந்து பயணிகள் பயத்தில் அலறினர்.பின்னர் மீண்டும் புகுயோகா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க விமானி முடிவு செய்தார். இது குறித்து விமானி விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.
விமான நிலையத்தில் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்சுகள் தயார் நிலையில் இருந்தனர்.தரையிறங்கிய விமானத்தின் அவசரகால வழிகள் வழியாக பயணிகள் பாதுகாப்பாகஇறங்கினர். பின்னர் விமானத்தின் என்ஜினில் எரிந்த தீ அணைக்கப்பட்டது. விமானி சாதுரியமாக செயல்பட்டதால் பயணிகள் காயங்கள் இன்றி உயிர் பிழைத்தனர்.
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…
வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது…
சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…
சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…