ஜப்பானின் புகுயோகா நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து “ஆல் நிப்பான் ஏர்வேஸ்” நிறுவனத்துக்கு சொந்தமான “போயிங் 767” ரக விமானம் ஓன்று தலைநகர் டோக்கியோவிற்கு புறப்பட்டு சென்றது.
இந்த விமானத்தில் மொத்தமாக 278 பயணிகள் பயணம் செய்தனர். இந்த விமானம் புறப்பட்டு சென்ற ஒரு மணி நேரத்திற்கு பின் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது விமானத்தின் என்ஜினில் திடீரென தீப்பிடித்தது.
இதனால் விமானத்தில் இருந்த அனைத்து பயணிகள் மத்தியில் பதற்றமும் , பீதியும் ஏற்பட்டது. இதை தொடர்ந்து பயணிகள் பயத்தில் அலறினர்.பின்னர் மீண்டும் புகுயோகா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க விமானி முடிவு செய்தார். இது குறித்து விமானி விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.
விமான நிலையத்தில் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்சுகள் தயார் நிலையில் இருந்தனர்.தரையிறங்கிய விமானத்தின் அவசரகால வழிகள் வழியாக பயணிகள் பாதுகாப்பாகஇறங்கினர். பின்னர் விமானத்தின் என்ஜினில் எரிந்த தீ அணைக்கப்பட்டது. விமானி சாதுரியமாக செயல்பட்டதால் பயணிகள் காயங்கள் இன்றி உயிர் பிழைத்தனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…