விஷாலின் 31- வது படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஹைதராபாத்தின் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியுள்ளது.
நடிகர் விஷால் சக்ரா படத்தை தொடர்ந்து, அறிமுக இயக்குனர் சரவணன் என்பவர் இயக்கத்தில் தனது 31 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஷாலிற்கு ஜோடியாக நடிகை டிம்பிள் ஹயாதி நடிக்கிறார். இந்த திரைப்படத்தை விஷால் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட நிலையில், கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், படத்திற்கான படப்பிடிப்பை ஹைதராபாத்தின் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பைத் தொடங்கி நடத்தி வருகின்றனர். விரைவில் படத்திற்கான மற்ற அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து…
கேம்பிரிட்ஜ் : பூமியிலிருந்து 124 ஒளியாண்டுகள் தொலைவில், உள்ள K2-18 K2-18b எனப்படும் புறக்கோள் குறுமீனைச் சுற்றி வருகிறது. கடந்த…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…