சித்ராவின் மரணம் குறித்து சக நடிகை, நடிகர்களிடம் விசாரணை.!

Published by
Ragi

சித்ராவின் மரணம் தொடர்பாக அவருடன் பணிபுரிந்த சக கலைஞர்களிடம் தனி தனி இடங்களில் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து வந்த சித்ரா இன்று அதிகாலை நசரத்பேட்டையில் உள்ள ஹோட்டலில் தூக்கில் தொங்கியப்படி பிணமாக மீட்கப்பட்டார் .இவரது மரணம் தொடர்பான விசாரணையை நசரத்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

இவர் தனது சீரியலுக்காக ஈவிபி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பை முடித்து விட்டு நள்ளிரவு 2 மணியளவில் தான் கணவரான ஹேமந்துடன் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் வந்துள்ளனர் . அதனையடுத்து தான் குளிக்க செல்வதாக கூறி அறையிலிருந்து ஹேமந்தை வெளியேற்றிய பின்னர்,வெகு நேரமாகியும் கதவை திறக்காததால் ஹோட்டல் ஊழியரிடம் கூறி மாற்று சாவி உபயோகித்து கதவை திறந்து பார்த்த போது பட்டு புடவையில் தூக்கில் தொங்கியப்படி கண்டதாக ஹேமந்திடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது .

இதனிடையே சித்ராவின் கன்னத்தில் ரத்த காயம் இருந்தது சந்தேகத்தை அதிகரித்துள்ளது .எனவே நசரத்பேட்டை போலீசார் பல கோணங்களில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வகையில் சித்ராவுடன் நடித்த சின்னத்திரை நடிகர், நடிகைகளிடம் தனி தனி இடங்களில் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சித்ராவின் மறைவு அவருடன் பணிபுரிந்த சக கலைஞர்கள் மற்றும் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Ragi

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

12 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

12 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

13 hours ago