சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் உயிரிழந்த தந்தை மற்றும் மகனின் மரணத்திற்கு நீதி கோரி பல பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த பென்னிஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக அரசியல் பிரமுகர்களும், பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது பிரபலங்கள் பலர் இறந்த ஜெயராஜ் மற்றும் பென்னிஸ் ஆகியோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கோரி சமூக வலைத்தளங்களில் #JusticeForJeyarajAndFenix என்ற ஹேஷ்டேக் உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர். அதில் ஜெயம்ரவி கூறியதாவது, யாரும் சட்டத்திற்கு மேல் இல்லை என்றும், இந்த மனிதாபமற்ற செயலுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து நடிகை ஹன்சிகா கூறுகையில், ஜெயராஜ் மற்றும் பென்னிஸ் மீது சுமத்தப்பட்ட கொடூரத்தை கேட்டு பயந்தேன், இப்படி ஒரு 2 போலீசார் செய்த வெறித்தனமான செயலால் ஒட்டுமொத்த காவல்துறை மற்றும் நாடுக்கு அவமானம் ஏற்பட்டது. சட்டத்தின் முன் எல்லோருக்கும் ஒரே நீதி செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
சாந்தனு கூறுகையில், போலீஸ் மிருகத்தனத்தை நிறுத்த வேண்டும், சட்டம் எல்லாவற்றிற்கும் மேலாக இருந்தால், அதன் சக்தி என்ன என்பதை காட்டும் நேரம் இது என்று தெரிவித்துள்ளார். மேலும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இதுகுறித்து கூறுகையில், சாத்தான்குளமத்தில் நடந்தது கொடூரமானது, மனிதநேயத்தை அவமதிப்பது, குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். அந்த ஏழை ஆத்மாக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். சில மனிதர்கள் வைரஸ்களை விட ஆபத்தானவர்கள் என்று தெரிவித்துள்ளார். இவர்களின் இந்த கருத்துகளுக்கு பலர் தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…
குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…