தமிழ் முன்னணி தொடராகிய செம்பருத்தி தொடரிலிருந்து அதன் கதாநாயகன் விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளதால், ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் முன்னணி தொடர் செம்பருத்தி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று நன்முறையில் போய்க்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியலின் கதாநாயகனாக கார்த்தி கடந்த 800 தொடர்கள் வரை நடித்துள்ளார். எனவே மக்கள் மத்தியில் அவரே கதாநாயகனாக பதிவாகி விட்ட நிலையில் தற்பொழுது கதாநாயகன் கார்த்திக் சீரியலில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதன் உண்மைத் தன்மை குறித்து முழுமையாக தெரியாவிட்டாலும், அதிக அளவில் சமூக வலைதளங்களில் தற்போது தான் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.
மேலும் ஏற்கனவே தொடரிலிருந்து டேட் கொடுக்க முடியவில்லை என்பதற்காக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஜனனி நீக்கப்பட்ட நிலையில் அவர் அண்மையில் இது குறித்து பேசுகின்ற ஒரு வீடியோவில்சீரியலுக்குள்ளும் சில பிரச்சனைகள் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் இந்த சீரியலில் இருந்து யாரை மாற்ற வேண்டும் என அவரிடம் கேள்வி கேட்டதற்கு, கதாநாயகன் கார்த்திகை தான் மாற்ற வேண்டும். ஏன் என்றால் அவருக்கு சீரியலில் தற்போது நடிக்க ஆசையில்லை. படங்களில் தான் நடிக்க ஆசை என கூறியிருந்தார். ஒருவேளை இவர் சொன்னது போல கார்த்திக் படங்களில் நடிக்க ஆசை இருப்பதால் சீரியலை விட்டு வெளியேறுகிறார் என்ற சந்தேகமும் எழும்ப ஆரம்பித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தற்பொழுதுதான் கார்த்திக் நடிப்பில் கர்ணன் எனும் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…