நடிகர் அஜித்துடன் செல்ஃபி, வீடியோ எடுத்த ரசிகை பணி நீக்கம்..!!

Published by
பால முருகன்

கடந்த ஆண்டு மே மாதம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்த நடிகர் அஜித்துடன் செல்ஃபி, வீடியோ எடுத்த ரசிகை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

நடிகர் அஜித் குமார் கடந்த ஆண்டு மே மாதம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக தன் மனைவி ஷாலினியுடன் வந்தார் அப்பொழுது அங்குள்ள மருத்துவமனையில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வந்த பார்சானா  அஜித்துடன் செல்ஃபி எடுத்தார். அப்போது அதனை பார்த்த மருத்துவமனையின் பாதுகாப்பு அதிகாரிகள் பார்சானாவிடம்  இருந்து அவரது தொலைபேசியை பறித்துக் கொண்டு நிர்வாகத்தின் தனியுரிமை கொள்கை அடிப்படையில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருபவர்களிடம் புகைப்படம் எடுப்பது மற்றும் அதை சமூக வலைதளங்களில் வெளியீடுவது தவறு என்று கூறி தொலைபேசியை கொடுத்துள்ளனர்.

ஆனால் அவர் எடுத்த அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியானது.  இதனை பார்த்த சிலர் நடிகர் அஜித்திற்கு கொரோனோவா என்று வதந்தி செய்தியை பரப்பி வந்தனர். இதனால் பார்சானாவை மருத்துவமனையில் இருந்து பணிஇடைநீக்கம் செய்யப்பட்டார். இதுகுறித்து கேள்விப்பட்ட நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு பார்சானாவுக்கு  வேலை கிடைக்கச் செய்தார். அதற்கு பிறகு சிறியது நாட்களிலே மீண்டும் பணி நீக்கம் செய்யப்பட்டார். லோன் காரணங்களை காட்டி பார்சானாவின் படிப்பு சான்றிதழையும் வழங்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்து வந்துள்ளது.

இந்த நிலையில், ஒரு வருடத்திற்கு மேலாக பணிக்கு செல்லமுடியாமல், தனது வயதான தாய், தந்தையை கவனிக்க முடியாமல் இருந்துள்ளார். இதனால் நடந்த தகவலை அஜித்துடன் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவை பார்சானா தொடர்பு கொண்டுள்ளார்.

சுரேஷ் சந்திராவை தொடர்பு கொண்டு நடந்ததை கூறியவுடன் முதலில் சுரேஷ் சந்திரா அஜித்திடம் பேசி நிவாரணம் வாங்கி தருவதாக கூறியதாகவும், அதற்கு பிறகு முடியாது என்றும் மருத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் பார்சானா சில நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்க ப்பட்டார். இதனை தொடர்ந்து பார்சானா வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அஜித்தின் மேலாளர் சுரேஷ்சந்திரா மீது ஏமாற்றுதல் ,நம்பிக்கை துரோகம் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் புகார் அளித்துள்ளார். பார்சானா அளித்த புகாரை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Published by
பால முருகன்
Tags: Ajith Kumar

Recent Posts

ரோஹித் சர்மா சாதனையை நெருங்கிய ஹர்திக் பாண்டியா! அடுத்த போட்டியில் முறியடிப்பாரா?

ரோஹித் சர்மா சாதனையை நெருங்கிய ஹர்திக் பாண்டியா! அடுத்த போட்டியில் முறியடிப்பாரா?

புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட்…

9 hours ago

பட்ஜெட் 2025 தாக்கல் : ‘மீண்டும் புறக்கணிக்கப்படும் தமிழகம்’ த.வெ.க தலைவர் விஜய் காட்டம்!

சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…

10 hours ago

தமிழ்நாடு மீது இருக்கின்ற வன்மத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இந்த பட்ஜெட் – துணை முதல்வர் உதயநிதி காட்டம்

சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…

11 hours ago

மத்திய பட்ஜெட்டுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம்!

கேரளா : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி…

11 hours ago

‘இட்லி கடை’யில் அருண் விஜய்… மாஸ் போஸ்டரை வெளியிட்டு ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

சென்னை : கடைசியாக தனது சொந்த இயக்கத்தில் "ராயன்" படத்தில் நடித்த நடிகர் தனுஷ் தற்போது 'நிலவுக்கு என்மேல் என்னடி…

12 hours ago

பட்ஜெட் 2025 தாக்கல்! ஏற்றத்துடன் முடிந்த பங்குச்சந்தை…நிபுணர்கள் சொன்ன கருத்து!

டெல்லி : ஆண்டு தோறும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில், பொதுவாக பங்குச்சந்தை பரபரப்பாக இருக்கும் என்பது அனைவர்க்கும்…

12 hours ago