புகழ் பெற்ற தமிழ் திரைப்பட ஆசிரியர் கவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம் இன்று!

Published by
Rebekal

தமிழகத்தின் புகழ்பெற்ற கவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம் வரலாற்றில் இன்று.

ஜூன் 24ஆம் தேதி 1927 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகிலுள்ள சிறுகூடல்பட்டி எனும் கிராமத்தில் சாத்தப்ப செட்டியார் மற்றும் விசாலாட்சி ஆகியோருக்கு பிறந்தவர்தன் முத்தையா என அழைக்கப்படும் கவியரசு கண்ணதாசன். இவருக்கு ஆறு சகோதரிகள் மற்றும் மூன்று சகோதரர்கள் உள்ளனர். சிறுவயதிலேயே எழுத்தின் மீது இருந்த ஆர்வம் காரணமாக சிறு சிறு புத்தகங்களை வாசித்து பத்திரிக்கை எழுத வேண்டுமென ஆர்வத்தை உருவாக்கிக் கொண்டவர் கவிஞர் கண்ணதாசன். இவரது இந்த ஆர்வம் காரணமாக இவர் தமிழகத்தின் புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியராக உருவெடுத்தார்.

இவர் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள் மற்றும் கட்டுரைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். மேலும் இவர் சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். மேலும் தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் இருந்தவர். சேரமான் காதலி படைப்புக்காக சாகித்ய அகாடமி விருதும் பெற்ற இவருக்கு மேலும் கம்பர் மற்றும் பாரதியாரின் பாடல்களில் மீது மிகுந்த ஈடுபாடு உள்ளது.

இவர் பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டு இருந்த நிலையில், இவரது இவர் 1981-ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். இந்நிலையில் இவரது நினைவாக தமிழ்நாடு அரசு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது. இரண்டு தளங்களைக் கொண்ட இந்த மண்டபத்தில் கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. மேல்தளத்தில் அரங்கமும் கீழ்தளத்தில் 2400 நூல்களுடன் கூடிய நூலகம் உள்ளது. மேலும், அந்த அரங்கில் கவிஞர் கண்ணதாசன் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

10 mins ago

வேட்டையன் இசை வெளியீட்டு விழா.. ரஜினி சொன்ன “கழுதை – டோபி” கதை!

சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…

13 mins ago

அப்பா என் பாட்டு எப்படி இருக்கு.. மாரி செல்வராஜ்-க்கு டஃப் கொடுத்த அவரின் குட்டி வாண்டு.!

சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…

18 mins ago

“அவருக்கு துளிகூட பயம் இல்லை” ! ரிஷப் பண்ட்டை புகழ்ந்த ஆடம் கில்கிறிஸ்ட்!

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…

38 mins ago

“அதிமுக மீண்டு வரவேண்டும்” உதயநிதி விருப்பம்.!

சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…

38 mins ago

3 நாள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி.!

டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…

50 mins ago