பிரபல பின்னணி பாடகர் பம்பா பாக்யா திடீர் மரணம்..!

Default Image

பிரபலமான பிண்ணனி பாடகர் பம்பா பாக்யா மாரடைப்பால் காலமானார். இவருக்கு வயது 49. 

பாடகர் பம்பா பாக்யா இசையமைப்பாளர் .ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், வெளியான “ராவணன்” படத்தில் இடம்பெற்ற கெடாகறி என்ற பாடல் மூலம் பாடகராக அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து எந்திரன் 2.0 படத்தில் “புள்ளினங்காள்” , “சர்கார்” படத்தில் இடம்பெற்றிருந்த “சிம்ட்டாங்காரன்”, “பிகில்” படத்தில் இடம்பெற்றிருந்த “காலமே”, என பல ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார்.

அதைப்போல, இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி இசையமைத்த “எதுக்கு உன்ன பார்த்தேன்னு நினைக்க வைக்கிறியே…” என்ற பாடலையும், பம்பா பாக்யா தான் பாடியிருந்தார். மேலும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இருந்து வெளியான ‘பொன்னி நதி’ பாடலையும் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பம்பா பாக்யா பாடியுள்ளார்.

இந்த நிலையில், 49 வயதான பம்பா பாக்யா மரடைப்பால் இன்று காலமானார். இவரது திடீர் மறைவுக்கு திரையுலக சேர்ந்த பிரபலங்களும், ரசிகர்களுக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்