மாஸ்க் அணியாமல் கொடைக்கானல் சென்ற பிரபல நடிகைக்கு அபராதம் விதித்த காவல்துறையினர்.
கொரோனா ஊரடங்கு தற்பொழுது ஓரளவு தளர்வில் இருந்தாலும் அனைவரும் முக கவசம் அணிந்து சமூகஇடைவெளிகளை கடைபிடிக்க வேண்டும் என்பது அரசு கட்டாயமான உத்தரவாக கொடுத்துள்ளது. இந்நிலையில், தற்போது தளர்வு அதிகரித்துள்ளதால் சுற்றுலா தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டு மக்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக செல்ல ஆரம்பிக்கின்றனர். கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்து இருக்கிறது. எனவே அங்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் மக்கள் சமூக இடைவெளிகளை பின்பற்றுகிறார்களா? முகக்கவசம் அணிந்து வருகிறார்களா என்பது குறித்து சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ் திரைப்படத்தில் அருவி எனும் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான நடிகை அதிதி பாலாஜி தனது காரில் கொடைக்கானல் சுற்றுலா சென்ற போது மாஸ்க் அணியாமல் சென்றுள்ளார். இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவருக்கு 200 அபராதம் விதித்துள்ளனர். அவர் அந்த அபராதத்தையும் செலுத்தி விட்டு பின் முன் கவசம் அணிந்து சென்று உள்ளார். ஆனால் காரில் செல்லும் பொழுது முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளதா என தற்பொழுது நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…
துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…
சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…
சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு…
சென்னை : இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழாவில், சென்னை மாநகரத்தில்…
நாகை : நாகை மாவட்டம் கீழையூர் அருகே கருங்கண்ணி ஊராட்சியைச் சோ்ந்த 26 பேருக்கு முதல்வர் நிகழ்ச்சியின் போது வழங்கப்படுவதாக…