ஆச்சி மனோரமா அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பது தனது நீண்டகால கனவு என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் சிறந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகைகளில் ஒருவர். இவர் திரையுலகில் அறிமுகமாகிய 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் 25 படங்கள் என்ற மைல்கல்லை பிடித்துள்ளார். அண்மையில் தனது 25வது படத்தின் டைட்டில் மோஷன் போஸ்ட்ர் வெளியிட்டார். பூமிகா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் அவர்கள் தயாரிக்க ரவீந்திரன் பிரசாத் இயக்குகிறார்.
இது குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறிய போது, கதையும், கதாபாத்திரமும் பிடித்து ஒப்புக் கொண்ட படம் தான் பூமிகா. இதில் தனக்கு துணிச்சலான கேரக்டர் என்றும் கூறியிருந்தார். அதனையடுத்து தனக்கு வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை என்றும், அதிலும் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகை ஆச்சி மனோரமாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து தேசிய விருது வாங்க வேண்டும் என்பது தனது நீண்டகால கனவு என்றும், கண்டிப்பாக தனது கனவு நிறைவேறும் என்றும் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில்…
சென்னை : அண்மையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர்…
சென்னை : தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள பாடகி ஸ்ரேயா கோஷல் மிகவும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் முதற்கட்டமாக கடந்த ஆண்டு வெற்றிகரமாக தனது…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும்…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை…