சம்பளத்தை குறைக்க தயாராகும் பிரபல நடிகை.!

Default Image

கொரோனா நெருக்கடியில் தயாரிப்பாளருக்கு உதவும் வகையில் தனது சம்பளத்தை குறைக்க தயாராக உள்ளதாக கீர்த்தி சுரேஷ் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் வேலைநிறுத்தமும் செய்யப்பட்டுள்ளது. இதனால் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் பல படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஹரிஷ் கல்யாண், விஜய் ஆண்டனி, மகத் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் தங்களது சம்பளத்தை குறைக்க தயாராக உள்ளதாக அறிவித்திருந்தார்கள். இதனால் தயாரிப்பாளர்கள் சிறிது மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது பிரபல முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், இந்த நெருக்கடியான சூழலில் தயாரிப்பாளருக்கு உதவ முன் வந்துள்ளார். அவர் நெருக்கடி முடியிந்ததும் தனது ஊதியத்தை குறைக்க தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் அவர் இனிவரும் படத்திற்கு 20-30% வரை சம்பளத்தை குறைக்க தயாராக இருப்பதாக வெளிப்படுத்தியுள்ளார். இவர் தற்போது ஓடிடியில் வெளியாகவுள்ள பெங்குயின் படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ooty kodaikanal chennai hc
Venkatesh Iyer - rahane
Tamilnadu CM MK Stalin - TN Budget 2025 Rupees symbol
world cup 2027
TN Budget - TN Govt
train hijack pakistan