புத்தக கண்காட்சியில் பிக்பாக்கெட் செய்ததாக பிரபல நடிகை கைது..!

Published by
லீனா

கொல்கத்தா சர்வதேச புத்தகக் கண்காட்சியில் பிக்பாக்கெட் செய்த குற்றச்சாட்டின் பேரில் பிரபல நடிகை நடிகை ரூபா தத்தா கைது செய்யப்பட்டுள்ளார்.  இந்த நிலையில், நடிகையின் பையில் இருந்து 65,760 ரூபாய் கிடைத்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட போது ரூபாவால் சரியான பதில் எதுவும் சொல்ல முடியவில்லை. அவர் நெரிசலான கண்காட்சிக்குள் பிக்பாக்கெட் அடித்ததாக ஒப்புக்கொண்டார். மேலும் அவர் இதே செய்வது இது முதல் முறை அல்ல என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, அவரது பையிலிருந்து போலீசார் நாட்குறிப்பை கண்டுபிடித்தனர். அதில் அவர் திருடியதற்கான கணக்கை பராமரிப்பதற்காக பயன்படுத்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, பிதான்நகர் வடக்கு காவல் நிலையத்தின் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயன்யா நாத் சாஹாவின் புகாரின்படி, நடிகர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 379/411-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் இன்று  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது மற்றும் அவர் ஒரு நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். ரூபா தத்தா டோலிவுட் (வங்காளத் திரையுலகம்) மற்றும் பாலிவுட் இரண்டிலும் பல சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

தூத்துக்குடி, கன்னியாகுமரி உட்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

தூத்துக்குடி, கன்னியாகுமரி உட்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…

43 minutes ago

ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்…அவசரமாக இந்தியா திரும்பிய பிரதமர் மோடி!

ஸ்ரீநகர் :  நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…

1 hour ago

கைவிட்ட அணியை கதறவிட்ட கே.எல்.ராகுல்! ஷாக்கான லக்னோ உரிமையாளர்?

லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…

1 hour ago

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்….தற்போதைய நிலை என்ன?

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர், ஆனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள்…

2 hours ago

LSG vs DC : லக்னோவை பந்தாடிய டெல்லி கேபிட்டல்ஸ்! 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…

9 hours ago

LSG vs DC : அதிரடி காட்டிய லக்னோ! இறுதியில் சுருட்டிய டெல்லி! இதுதான் டார்கெட்!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

11 hours ago