புத்தக கண்காட்சியில் பிக்பாக்கெட் செய்ததாக பிரபல நடிகை கைது..!

Default Image

கொல்கத்தா சர்வதேச புத்தகக் கண்காட்சியில் பிக்பாக்கெட் செய்த குற்றச்சாட்டின் பேரில் பிரபல நடிகை நடிகை ரூபா தத்தா கைது செய்யப்பட்டுள்ளார்.  இந்த நிலையில், நடிகையின் பையில் இருந்து 65,760 ரூபாய் கிடைத்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட போது ரூபாவால் சரியான பதில் எதுவும் சொல்ல முடியவில்லை. அவர் நெரிசலான கண்காட்சிக்குள் பிக்பாக்கெட் அடித்ததாக ஒப்புக்கொண்டார். மேலும் அவர் இதே செய்வது இது முதல் முறை அல்ல என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, அவரது பையிலிருந்து போலீசார் நாட்குறிப்பை கண்டுபிடித்தனர். அதில் அவர் திருடியதற்கான கணக்கை பராமரிப்பதற்காக பயன்படுத்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, பிதான்நகர் வடக்கு காவல் நிலையத்தின் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயன்யா நாத் சாஹாவின் புகாரின்படி, நடிகர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 379/411-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் இன்று  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது மற்றும் அவர் ஒரு நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். ரூபா தத்தா டோலிவுட் (வங்காளத் திரையுலகம்) மற்றும் பாலிவுட் இரண்டிலும் பல சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்