சிம்பு தற்போது நடித்து வரும் மாநாடு படத்தில் பிரபல நடிகர் வாகை சந்திரசேகர் அவர்கள் இணைந்துள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் புதிய திரைப்படம் தான் மாநாடு. இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு இடைநிறுத்தப்பட்டது. அதன்பின்பு சுசீந்திரனின் இயக்கத்தில் ஈஸ்வரன் எனும் படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு, தற்போது மீண்டும் மாநாடு படப்பிடிப்பில் கலந்து கொண்டு உள்ளார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன் பின் புயல் மற்றும் சூறாவளி ஏற்பட்டதால் மீண்டும் படப்பிடிப்பு தாமதம் ஆன நிலையில், புயலுக்குப் பின் தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது. எனவே, மீண்டும் படப்பிடிப்பை துவங்கி உள்ளனர். இந்த மாநாடு படத்தில் பாரதிராஜா நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், அவர் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து சிம்புவின் மாநாடு படத்தில் நடிகர் வாகை சந்திரசேகர் அவர்கள் இணைந்துள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று ஐபிஎல் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது. முதல் போட்டி மதியம் 3:30மணிக்கு லக்னோ மற்றும் குஜராத்…
சென்னை : ஒரு காலத்தில் ஐபிஎல் தொடரில் ஒரு பலமான அணியாக பார்க்கப்பட்ட சென்னை அணி, இந்த சீசனில் பரிதாபமாக…
சென்னை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங்…
சென்னை : ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தொடர்ந்து 5வது முறையாக தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ். 8…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…