சிம்பு தற்போது நடித்து வரும் மாநாடு படத்தில் பிரபல நடிகர் வாகை சந்திரசேகர் அவர்கள் இணைந்துள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் புதிய திரைப்படம் தான் மாநாடு. இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு இடைநிறுத்தப்பட்டது. அதன்பின்பு சுசீந்திரனின் இயக்கத்தில் ஈஸ்வரன் எனும் படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு, தற்போது மீண்டும் மாநாடு படப்பிடிப்பில் கலந்து கொண்டு உள்ளார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன் பின் புயல் மற்றும் சூறாவளி ஏற்பட்டதால் மீண்டும் படப்பிடிப்பு தாமதம் ஆன நிலையில், புயலுக்குப் பின் தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது. எனவே, மீண்டும் படப்பிடிப்பை துவங்கி உள்ளனர். இந்த மாநாடு படத்தில் பாரதிராஜா நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், அவர் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து சிம்புவின் மாநாடு படத்தில் நடிகர் வாகை சந்திரசேகர் அவர்கள் இணைந்துள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…
டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…
பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…
காலி : நியூஸிலாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய சுற்றுப்பயணத் தொடரை விளையாடி வருகிறது. இந்த…