நடிகர் பிருத்விராஜ் அவர்களின் 6 வயது மகளின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு உள்ளதாக கொடுத்த புகாரில் பெயரில் அக்கணக்கு நீக்கப்பட்டது.
பிரபலங்கள் பலரின் பெயரில் போலிக் கணக்குகளை சமூக வலைத்தளங்களில் தொடங்குவதும் , அதில் அந்த பிரபலத்தின் புகைப்படத்தையும் பகிர்ந்து வருகிறார்கள் . அவ்வாறு போலிக் கணக்குகளை கண்ட பிரபலங்கள் சிலர் புகார் அளித்து அந்த பக்கத்தை நீக்கவும் செய்துள்ளனர் . அந்த வகையில் பிரபல மலையாள நடிகரும் ,தமிழில் ஒரு சில படங்களில் நடித்தவருமான பிருத்விராஜ் அவர்களின் 6 வயது மகளான அலாக்ரிதா பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டிருந்தது .
அதில் 934 ஃபாலோவேர்ஸை உடைய அந்த போலி இன்ஸ்டாகிராம் கணக்கை பிருத்விராஜ் மற்றும் சுப்ரியா மேனன் நிர்வகிப்பதாக பதிவிட்டிருந்தது. இதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பகிர்ந்த பிருத்விராஜ், இந்த போலி கணக்கை உங்களின் பார்வைக்கு கொண்டு வர விரும்பியதாவும் , தங்களின் 6 வயது மகளுக்கு சமூக ஊடகங்களில் கணக்குகளை தொடங்குவதற்கான அவசியத்தை நாங்கள் காணவில்லை என்றும் , அவள் பெரியவள் ஆனதும் அவளுக்கு வேண்டிய சமூக ஊடக கணக்குகள் குறித்து அவளே தீர்மானிப்பாள் என்று தெரிவித்துள்ளார் . இந்த கணக்கை யாரும் பின்தொடர வேண்டாம் என்றும் பிருத்விராஜ் அவர்களின் மனைவி சுப்ரியா மேனனும் கூறியுள்ளார் . அதனையடுத்து இவர்கள் கொடுத்த புகாரை தொடர்ந்து அந்த போலி கணக்கு இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கப்பட்டது .
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…