அடுத்த 5 ஆண்டுகளில் பேஸ்புக் ஒரு மெட்டாவர்ஸ் நிறுவனமாக மாறும் என்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் “மெட்டாவர்ஸ்” என்ற டிஜிட்டல் உலகில் பணியாற்றுவதற்காக ஒரு தயாரிப்புக் குழுவை உருவாக்குகிறது, அங்கு மக்கள் வெவ்வேறு சாதனங்களுக்கு இடையில் செல்லவும் மெய்நிகர்(Virtual) சூழலில் தொடர்பு கொள்ளவும் முடியும் என்று தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் திங்களன்று தெரிவித்தார்.
இதனையடுத்து,இந்த அணி பேஸ்புக் நிறுவனத்தின் மெய்நிகர் ரியாலிட்டி (Virtual Reality) அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் என்று குழுவின் நிர்வாகி ஆண்ட்ரூ போஸ்வொர்த் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக,மெட்டாவர்ஸை ஒரு சாதாரண இணையமாக நீங்கள் சிந்திக்கலாம்,ஆனால்,அங்கு காட்சிகளை பார்ப்பதற்குப் பதிலாக,அதில் நீங்கள் இருப்பது போன்று உணர்வீர்கள்”,என்று மார்க் ஜுக்கர்பெர்க் கடந்த வாரம் ஒரு நேர்காணலில் தெரிவித்தார்.
இதற்கிடையில்,நிறுவனம் மெய்நிகர் ரியாலிட்டியில் (Virtual Reality) அதிக முதலீடு செய்துள்ளது.அதன் அதன் ஓக்குலஸ் விஆர் ஹெட்செட் போன்ற பொருள்களை உருவாக்கி, ஏஆர் கண்ணாடிகள் மற்றும் கைக்கடிகார தொழில்நுட்பங்களில் வேலை செய்கிறது.குறிப்பாக,நிறுவனம் வி.ஆர் கேமிங் ஸ்டுடியோக்களையும் வாங்கியுள்ளது.நிறுவனத்தின் மெய்நிகர் ரியாலிட்டியில் சுமார் 10,000 ஊழியர்களைக் கொண்டுள்ளது என்று மார்ச் மாதத்தில் தகவல் வெளியானது.
மேலும்,இது தொடர்பாக மார்க் தனது பேஸ்புக் பதிவில் கூறியதாவது , “நாங்கள் இதைச் சிறப்பாகச் செய்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் முதன்மையான ஒரு சமூக ஊடக நிறுவனமாக இருப்பதைப் பார்க்கும் மக்களிடமிருந்து,மெட்டாவர்ஸ் நிறுவனமாக மாறுவோம்.வரவிருக்கும் மாதங்களில் இதைப் பற்றி நான் அதிகம் விவாதிப்பேன்”,என்று தெரிவித்தார்.
மேலும்,மற்றொரு பதிவில் “பேஸ்புக்கின் அடுத்த ஒரு பகுதியாக, நாங்கள் ஒரு புதிய மெட்டாவர்ஸ் தயாரிப்பு குழுவை அமைத்து வருகிறோம். எங்கள் ஒவ்வொரு முக்கிய முயற்சிகளும் – சமூகம், வர்த்தகம், அடுத்த கணினி தளம் போன்றவை.அவை அனைத்தும் மிகப் பெரிய இலக்கின் ஒரு பகுதியாகும்,மெட்டாவர்ஸை உயிர்ப்பிக்க உதவுகின்றன. ஏனெனில், மெட்டாவர்ஸ் மொபைல் இணையத்தின் வாரிசாக இருக்கும் என்று நான் நம்புகிறேன், மேலும் இந்த தயாரிப்புக் குழுவை உருவாக்குவது எங்கள் பயணத்தின் அடுத்த கட்டமாகும்”,என்று பதிவிட்டுள்ளார்.
மெட்டாவர்ஸ் :
மெட்டாவர்ஸ் என்பது இணையத்தின் அடுத்த பரிணாமம் ஆகும். ஏனெனில்,இது டிஜிட்டல் உலகத்தை நம் உண்மையான உலகமாக பிரதிபலிக்கிறது. சுருக்கமாக சொல்வதானால் தியேட்டர்களில் நாம் பார்க்கும் ஒரு 3D திரைப்படத்தில் வரும் டிஜிட்டல் காட்சிகளை, நிஜ காட்சிகளாக காட்டுவதை போன்ற தொழில்நுட்ப அமைப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில், பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவத்தில்…
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம்…