பிரான்ஸ் அரசாங்கத்துக்கு 118 மில்லியன் வரியாக ஃபேஸ்புக் செலுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் அரசாங்கம் கடுமையான வரி விதிப்பு விதிமுறைகளை அண்மைக் காலங்களாக கடைபிடித்து வருகிறது. முக்கியமாக, பேஸ்புக் கூகுள், ஆப்பிள், அமேசன் போன்ற மிகப்பெரிய தொழில் நுட்பம் சார்ந்த நிறுவனங்களிடம் அவர்களது லாபத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை அரசுக்கு வரியாக செலுத்த வேண்டும் என பிரான்ஸ் தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த பத்து வருட கணக்கீடு மற்றும் அபராதம் ஆகியவை சேர்த்து ஃபேஸ்புக் மட்டும் பிரான்ஸ் அரசுக்கு 118 மில்லியன் டாலர்களை வரியாக செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது குறித்து கூறிய பேஸ் புக் செய்தி தொடர்பாளர், 2008 முதல் 2018 ஆம் ஆண்டுக்கான வாரியாக 606 மில்லியன் யூரோக்கள் செலுத்தவேண்டும் என பிரான்ஸ் அதிகாரிகள் வரி தணிக்கை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பிரான்சுடன் ஒப்பந்தங்கள் குறித்த தகவல்களை ஃபேஸ்புக் செய்தி தொடர்பாளர் அதிகமாக தெரிவிக்கவில்லை. என்றாலும், பிரான்ஸ் கணக்கீட்டின்படி 2019 ஃபேஸ்புக்கின் வருமானம் அதன் முந்தைய ஆண்டுகளைவிட இரட்டிப்பாகியுள்ளது. 747 யூரோக்கள் வருமானம் ஈட்டி உள்ளதாகவும் இந்த கணக்கீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…
ஸ்ரீநகர் : நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…
லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர், ஆனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…