அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவிட்ட வீடீயோவை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது.
உலக அளவில் கொரோனா தாக்குதலில் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது.அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள் ஒரு புறம் இருந்தாலும் ,அங்கு வருகின்ற நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறுகிறது.இதற்கான தீவிர தேர்தல் பரப்புரைகள் நடைபெற்று வருகிறது.
கொரோனா மற்றும் தேர்தல் பரப்புரைகள் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.அந்த வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஃபேஸ்புக்கில் பதிவிட்ட பதிவு ஓன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அவர் தேர்தல் பிரச்சாரத்தின்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டி அடங்கிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில்,குழந்தைகள் கொரோனா நோய்க்கு எதிரான எதிர்ப்பு சக்திகளை கொண்டவர்கள் என்றும் அவர்கள் எளிதாக நோய் தாக்குதலுக்கு ஆளாக மாட்டார்கள் என்றும் அவர் கூறும் வீடியோ ஆகும்.இதனிடையே அவர் பதிவிட்ட பதிவை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது.
இது தொடர்பாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஆண்டி ஸ்டோன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸைப் பற்றி அதிகம் அறியப்படாத நிலையில், அறிகுறிகள் இல்லாமல் கூட மற்றவர்களுக்கு அதைப் பரப்ப முடியும் என்று நம்பப்படுகிறது. “இந்த வீடியோவில் த எங்கள் கொள்கைகளை மீறுவதாகும்” என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : வழக்கமாக அஜித் படங்கள் என்றாலே அவருக்கென தனி மாஸான ஓப்பனிங் பாடல் இருக்கும். மாஸ் வசனங்களுடன் அவருடைய அறிமுக…
மகாராஷ்டிரா : இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல்…
அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும்…
டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…
மகாராஷ்டிரா : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியானது…
சென்னை : சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பது பல்வேறு அரசியல் த்தலைவர்களின் கோரிக்கையாக உள்ளது. காங்கிரஸ் எம்பியும் எதிர்க்கட்சி…