நேபாளம், பூடானில் அழிவை ஏற்படுத்திய வெள்ளம்..!

Published by
Sharmi

நேபாளம் மற்றும் பூடானில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அங்கு பலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.

கடந்த மூன்று நாட்களாக திபெத் பகுதியில் பருவமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக நேபாளத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேபாளம் மற்றும் திபெத்தின் எல்லையில் இருக்கும் சிந்துபால்சவுக் மாவட்டத்தின் மேலம்சி மற்றும் இந்திராவதி ஆகிய ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் அங்கிருக்கும் வீடுகள், சாலைகள் ஆகியவை அடித்து செல்லப்பட்டன.

மேலும், இந்த வெள்ளத்தில் கரையோர மக்கள் பலர் அடித்து செல்லப்பட்டது  அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெள்ளத்தால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மக்கள் பலரை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ராணுவ ஹெலிகாப்டர் வழியாக மேலம்சி பகுதி மக்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி வருகின்றனர்.

இதே போன்று பூடானிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு இருக்கும் லயா என்ற பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் பெரிய பாதிப்புகளை சந்தித்துள்ளது. மேலும், கார்டிசெப்ஸ் என்ற மருந்தை சேகரிக்க சென்ற மக்கள் இரவில் அங்கு தூங்கியதால் வெள்ளத்தில் சிக்கியிருக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களை மீட்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

Published by
Sharmi

Recent Posts

“அவர் இல்லாம விமானம் பறக்காது”… ஹஜ் பயணத்தை மேற்கொண்ட இளைஞருக்கு நடந்த அதிசயம்!“அவர் இல்லாம விமானம் பறக்காது”… ஹஜ் பயணத்தை மேற்கொண்ட இளைஞருக்கு நடந்த அதிசயம்!

“அவர் இல்லாம விமானம் பறக்காது”… ஹஜ் பயணத்தை மேற்கொண்ட இளைஞருக்கு நடந்த அதிசயம்!

மக்கா : விமானத்தைத் தவறவிட்ட நபரை மீண்டும் விமானமே அழைத்து சென்ற அதிசிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. லிபியாவைச் சேர்ந்த அமீர்…

3 minutes ago
ராமதாஸின் சரமாரி குற்றச்சாட்டு…நாளை கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் அன்புமணி!ராமதாஸின் சரமாரி குற்றச்சாட்டு…நாளை கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் அன்புமணி!

ராமதாஸின் சரமாரி குற்றச்சாட்டு…நாளை கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் அன்புமணி!

சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஏற்கனவே பேசுபொருளாக இருந்த நிலையில், அதனை இன்னும் பெரிய அளவில்…

47 minutes ago
சீட் கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை -பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!சீட் கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை -பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!

சீட் கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை -பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!

சென்னை : தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு மாநிலங்களவை எம்.பி-க்களின் பதவிக்காலம், வரும் ஜூலையில் நிறைவடைய இருக்கும் நிலையில், அடுத்த தேர்தல்…

1 hour ago
“என்னை யாரும் சந்திக்க வேண்டாம்” நிர்வாகிகளுக்கு முக்கிய உத்தரவு போட்ட அன்புமணி!“என்னை யாரும் சந்திக்க வேண்டாம்” நிர்வாகிகளுக்கு முக்கிய உத்தரவு போட்ட அன்புமணி!

“என்னை யாரும் சந்திக்க வேண்டாம்” நிர்வாகிகளுக்கு முக்கிய உத்தரவு போட்ட அன்புமணி!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பா.ம.க.வில் வெடித்துள்ள உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. ராமதாஸ்…

2 hours ago
கன்னட விவகாரம்: கமல்ஹாசனுக்கு கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஆதரவு.!கன்னட விவகாரம்: கமல்ஹாசனுக்கு கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஆதரவு.!

கன்னட விவகாரம்: கமல்ஹாசனுக்கு கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஆதரவு.!

கர்நாடகா : 'தக் லைஃப்' திரைப்பட நிகழ்ச்சியில் கமலின் கருத்துகள் கடும் எதிர்ப்புகளை பெற்று வருகிறது. அதாவது, சென்னையில் அண்மையில் நடைபெற்ற…

3 hours ago
கோவை – நீலகிரிக்கு மீண்டும் ரெட் அலர்ட்.! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்..!கோவை – நீலகிரிக்கு மீண்டும் ரெட் அலர்ட்.! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்..!

கோவை – நீலகிரிக்கு மீண்டும் ரெட் அலர்ட்.! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்..!

சென்னை : நேற்று காலை ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வடக்கு…

3 hours ago