சவுதியில் நாய்களுக்காக திறக்கப்பட்டுள்ள பிரத்யேகமான கஃபே.
சவுதி அரேபியாவில் நாய்களுக்காக அட்டகாசமாக உணவருந்த கூடிய விடுதி போன்ற ஒரு கஃபே ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. தீ பார்க்கிங் லாட் என பெயரிடப்பட்டுள்ள இந்த கடையை குவைத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் உருவாக்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் நான் குவைத்திலிருந்து சவுதி அரேபிய வந்தபொழுது நாயுடன் கடற்கரையில் நடந்து செல்ல ஆசைபட்டேன். ஆனால் எனக்கு மட்டும்தான் அனுமதிக்கப்பட்டது, எனது நாயை கடற்கரை ஓரத்தில் அழைத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதுபோல இங்கே இருப்பவர்களும் வருந்துவதை நான் உணர்ந்தேன். எனவே நாய்களும் நாயின் உரிமையாளர்களும் ஒரே இடத்தில் சந்திக்க கூடிய வகையில் தற்போது காஃபே ஒன்றை திறந்து வைத்துள்ளேன்.
இதனால் நாய்களுடன் அவர்கள் நிறைய நேரத்தில் செலவு செய்ய முடியும் என கூறியுள்ளார். இந்நிலையில் இது குறித்து கடைக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்கள் கூறும்போது, நாங்கள் எங்களது வளர்ப்புப் பிராணிகளான நாய்கள் மீது மிகுந்த பாசம் வைத்துள்ளோம். ஆனால், வெளியில் அதிகம் அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படாததால், நேரம் ஒதுக்கவும் முடியாது. அரேபியாவில் முதன் முறையாக நாய்களுக்கான இந்த கடை திறக்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. இதனால் எங்கள் நாய்களுடன் நேரத்தை செலவிடுவது மட்டுமல்லாமல் எங்கள் நாய்கள் பிற நாய்களுடன் பழக்கம் வைத்துக் கொள்ளவும் இது உதவியாக உள்ளது என கூறியுள்ளனர்.
காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…
கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…
திருபுவனை : புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் புரட்சியாளர் அம்பேத்கர் திருஉருவச் சிலையை நேற்று திறந்துவைத்தார். இவ்விழாவில் மே 17 இயக்கத்தின்…
கோவை : கோவையில் நடைபெற்று வரும் தவெக கருத்தரங்கில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் விஜய் வந்தபோது, விமான நிலையத்திற்குள் தடுப்புகள்,…
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…