புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும், மனுநீதி முகாம்களில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் நேரடியாக கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இந்த கூட்டத்தில் இவருக்கு பலரும் சால்வை போர்த்தி உள்ளனர்.
இவருக்கு அதிக அளவிலான சால்வை மற்றும் துண்டுகளை அணிவிப்பதால், ஒவொரு இடங்களிலும், 10 முதல் 15 நிமிடங்கள் வரை மக்களிடம் மனுக்களை பெறுவதில் தாமதம் ஏற்படுவதால், அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள், தனக்கு சால்வை அணிவிக்க வந்தவர்களை தடுத்து, ‘இனிமேல் எனக்கு யாரும் சால்வை அணிவிக்க வேண்டாம். அதற்கு பதிலாக மனு எழுத முடியாமல் சிரமப்படும் இரண்டு பொதுமக்களுக்கு மனு எழுதி கொடுங்கள்.’ என கூறியுள்ளார்.
இந்நிலையில், முதியவர் ஒருவர் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிஅக்காரிகளுக்கு திருநீறு பூசிவிட்டு சென்றார். அவரை பார்த்து அமைச்சர் விஜயபாஸ்கர், ‘நீங்கள் கட்டியிருக்கிற வேஷ்டி கரை காங்கிரஸ் ஆக இருந்தாலும், மறக்காமல் இரட்டை இலைக்கு ஓட்டு போட்டு விடுங்கள்.’என கூறியுள்ளார். இதனால் அவரை சுற்றியிருந்த அனைவரும் சிரித்தனர்.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…