ஏப்ரல் 24-இல் இந்தியா வருகிறார் ஐரோப்பிய ஆணைய தலைவர் …!

Default Image

ஐரோப்பிய ஆணைய தலைவர் அர்சலா வான் டெர் லியான் அவர்கள் இந்தியாவிற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக ஏப்ரல் 24 ஆம் தேதி வருகை தர உள்ளார்கள். இது குறித்த அதிகாரபூர்வ தகவலை மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் அர்சலா வான் டெர் லியான் அரசு முறை பயணமாக ஏப்ரல் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் இந்தியா வருகிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த வருகையின் போது பிரதமர் மற்றும் ஜனாதிபதியை சந்திக்கும் அவர், ஐரோப்பிய மற்றும் இந்தியா இடையே உள்ள இரு தரப்பு உறவு மற்றும் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்