#Breaking : இலங்கை அதிபர் குடும்பத்துடன் வெளிநாடு தப்பியோட்டம்.! 

Default Image

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பத்துடன் வெளிநாடு தப்பி சென்றுள்ளராம். புதன் கிழமை நாடு திரும்பிவிடுவார் என கூறப்படுகிறது. 

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது. இதனால், நாளுக்கு நாள், நிமிடத்திற்கு நிமிடம் ஒரு பிரேக்கிங் செய்தி வெளியாகி கொண்டே இருக்கிறது.

ஏற்கனவே அந்நாட்டு அதிபர் மக்கள் கண்ணில் படாமல் தலைமறைவாக இருந்த சூழலில், அதிபர் கோத்தபய ராஜபக்சே வெளிநாடு தப்பி செல்ல திட்டம் தீட்டி உள்ளார் என தகவல் வெளியாகி இருந்த்தது.

தற்போது அவர் வெளிநாடு தப்பி சென்றுவிட்டார் என்றும், அதுவும், கோத்தபய ராஜபக்சே குடும்பத்துடன் வேறுநாட்டுக்கு சென்றுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதில் இலங்கை ஊடகங்கள் வழியே வெளியான செய்தி என்னவென்றால், அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பத்துடன் அண்டை நாட்டிற்கு தான்  சென்றுள்ளார். வரும் புதன் கிழமை மீண்டும் இலங்கை திரும்பி விடுவார் என சபாநாயகர் மூலம் தகவல் வெளியாகியுள்ளதாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்