எனை நோக்கி பாயும் தோட்டா-வில் ஆர்வம் காட்டாத தனுஷ்! நாளை படம் ரிலீசாகுமா?!

Default Image
பல தடைகளை தாண்டி பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு கடைசியாக நாளை வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள திரைப்படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இந்த படத்தில் முதன்முதலாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் டீசர் என அனைத்தும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தப் படம் நாளை அதிக எதிர்பார்ப்புகளுடன் வெளியாவதற்கு முக்கிய காரணம், அந்த படத்தில் உள்ள பாடல்கள் தான் என இயக்குனரே அண்மையில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். இப்படம் தயாரிப்பாளர் ஐசரி கணேசன் அவர்கள் முயற்சியினால் வேல்ஸ் நிறுவனம் சார்பாக நாளை வெளியாக உள்ளது. இதற்கிடையில் இப்படத்திற்காக வாங்கிய 8 கோடி ரூபாய் பணம் இன்று செட்டில் செய்யப்படவுள்ளதாம். அந்தப் பணம் செட்டில் செய்யப்பட்டால் தான் படம் நாளை வெளியாகும் என கூறப்படுகிறது.
இதற்கிடையில் இப்படத்தின் ஹீரோ தனுஷிற்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பாக்கி உள்ளதாம். அதனால்தான் எப்போதும் தனது படங்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடும் தனுஷ் இந்த படத்திற்கு சில மனஸ்தாபங்களால், எந்த பதிவையும் பதிவிடாமல் உள்ளார் என கூறப்படுகிறது. படம் ரிலீசான பிறகுதான் படக்குழுவின் மற்ற பிரச்சனையெல்லாம் முடியும் எனவும் கூறப்படுகிறது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்