தனுஷின் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி தற்போது வரை எனை நோக்கி பாயும் தோட்டா சிக்கலில் ரிலீஸாமல் உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 6 அதாவது இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான வேலைகள் முழுவீச்சில் நடைபெற்றது. ஆனால் திடீரென்று சில காரணங்களால் மீண்டும் தள்ளிப் போனது.
இதற்க்கு காரணம் வினியோகஸ்தர் ராமராஜன் மேலுள்ள நீதிமன்ற வழக்கு தான். அவர் ஏற்கனவே வெளியிட்ட பாகுபலி, சிந்துபாத் ஆகிய படங்களின் நஷ்ட பாக்கி இன்னும் நிலுவையில் உள்ளதால் அந்த வழக்கு நீதிமன்றம் சென்றுள்ளது. நீதிமன்றத்தில் உள்ள வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இதற்கான விசாரணை நடந்து முடிந்து அதற்கு பின்னர் இவர் என்ஓசி (Non Objection Certificate) சர்டிபிகேட் கொடுத்தால் மட்டுமே படம் வெளியாகும். அதன் பின்னர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்.
மற்ற விநியோகிஸ்தர்கள் போல அவரும் NOC சர்டிபிகேட் கொடுத்து விட்டால் படம் நாளை கூட வெளியாக அதிக வாய்ப்புள்ளது. அல்லது படத்தின் ரிலீஸ் தேதி மாற்றியமைக்க வாய்ப்புள்ளது.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…
சென்னை : நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் ட்ரெய்னிங் (NCERT) அமைப்பு, இந்தியாவில் பள்ளிக் கல்விக்கான பாடநூல்களை…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
சென்னை : மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள மல்லை…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில்,…