இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் முதன்முறையாக நடித்துள்ள திரைப்படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இப்படத்தில் ஹீரோயினாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். சசிகுமார் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இப்படம் உருவாகி இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் பட ரிலீஸ் ஆகாமல் தள்ளி போய்க்கொண்டே இருந்தது. அதிக கடன் பிரச்சினையால் படம் வெளியாகாமல் இருந்து வந்தது.
இந்த கடன் பிரச்சனைகளை கோமாளி பட தயாரிப்பாளர் ஓரளவு தீர்த்து உள்ளதாகவும், அதனை அடுத்து தான் எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் செப்டம்பர் 6-ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியானது என தகவல் வெளியானது. அதற்கடுத்ததாக இந்த படத்தின் விநியோகஸ்தர் ராஜராஜன் ஏற்கனவே பாகுபலி, சிந்துபாத் படங்களின் வெளியீட்டின் போது ஏற்பட்ட கடன் பாக்கி செலுத்தாமல் உள்ளார். என புது சிக்கல் எழுந்தது.
இதனை அடுத்து, மீண்டும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்திற்கு தடை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம். ராஜராஜனுக்கும் விநியோகிஸ்தர்களுக்கும் இடையில் ஒரு நபரை நியமித்து பிரச்சனைகளை தீர்க்க வழி வகுத்துள்ளது.
அதற்குள் இன்னொரு பிரச்சனையாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடைசியாக வெளியான அச்சம் என்பது மடமையடா திரைப்படம், செங்கல்பட்டு ஏரியாவில் நஷ்டம் என கூறி செங்கல்பட்டு ஏரியா விநியோகிஸ்தர்கள் ENPT படத்தை இன்னும் வாங்காமல் உள்ளனராம். அதற்கு நேற்று வரை பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதனால் தான் இன்னும் இப்படத்திற்கான பூக்கிங் பெரிய மால், தியேட்டர்களில் ஆரம்பமாகவில்லையாம். படம் நாளை வெளியாகுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனராம்.
டெல்லி : மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை முதல்…
டெல்லி :டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத்…
கிருஷ்ணகிரி : மாவட்டத்தில் 8ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக வெளியான அதிர்ச்சி தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசுப்பள்ளி ஆசிரியர்கள்…
நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி நாளை முதல் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3…
டெல்லி : நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்களான அபிஷேக் சர்மா, வருண்…