போதைப்பொருள் வழக்கு: ராணாவிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை.!!

Default Image

போதைப்பொருள் வழக்கில் நடிகர் ராணா டகுபதியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தெலுங்கு திரையுலககில் நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் ஆகியோர்களுக்கும் போதை மருந்து கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக கடந்த 2017-ம் ஆண்டு காவல் துறை அதிகாரிகள், நடிகை சார்மி, மொமைத்கான், இயக்குனர் பூரி ஜெகன்நாத், நடிகர் ராணா, தருண், ரகுல் பிரீத் சிங், ரவிதேஜா, நந்து, தனீஷ், நவ்தீப் உள்பட 12 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த வழக்கில் பிரபல இயக்குனர் ஜெகன்நாத் மற்றும் நடிகை ரகுல் பிரீத் சிங் அகியோரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலாக்கதுறை விசாரணை நடத்தியது.

இந்த நிலையில் இவ்வழக்கில் நடிகர் ராணாவிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஹைதராபாத்திலுள்ள அலுவலகத்தில் நடிகர் ராணா டகுபதியிடம்  அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
suseenthiran
BJP WIN
IND vs ENG 2nd ODI cricket match
V. C. Chandhirakumar win
rohit sharma Kevin Pietersen