கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்சில் நடைபெற்ற தேர்தலில் 44 வயதான இமானுவேல் மக்ரோன் மீண்டும் பிரான்ஸ் அதிபராக 58 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது அவரது எதிர்க்கட்சியான தீவிர இடதுசாரி காட்சியாய் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தார்.
தற்பொழுது 58 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இரண்டாவது முறையாக பிரான்சில் அதிபராக முன்றாவது ஜனாதிபதி எனும் பெருமையை இவர் பெற்றுள்ளார். நாளை இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது. நாளைய தினத்தில் இம்மானுவேல் தான் பதவியேற்பதற்க்கான நாளையும் நிர்ணயித்து கூறுவார் என சொல்லப்படுகிறது.
இருப்பினும், வாக்கு வித்தியாசம் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே வருகிற ஜூன் மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இம்மானுவேல் பெரும்பான்மையயை இழப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால் வாக்காளர்களின் பெரும்பகுதியினர் இம்மானுவேலை விரும்பவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக ஒரு கருத்துக்கணிப்பில் 63% வாக்காளர்கள் இமானுவேல் மக்ரோனை விரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதால் பிரான்ஸ் அதிபராக இமானுவேல் தொடர்வதற்கான வாய்ப்புகள் குறைவு என சொல்லப்படுகிறது.
குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…
துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…
சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…
சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு…
சென்னை : இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழாவில், சென்னை மாநகரத்தில்…
நாகை : நாகை மாவட்டம் கீழையூர் அருகே கருங்கண்ணி ஊராட்சியைச் சோ்ந்த 26 பேருக்கு முதல்வர் நிகழ்ச்சியின் போது வழங்கப்படுவதாக…