இந்தியாவில் கால்பதிக்கும் டெஸ்லா…அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Default Image

இந்தியாவில் 2021 ஆம் ஆண்டு முதல் பிரபல எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா கால்பதிக்க உள்ளதாக அதன் சிஇஓ எலோன் மஸ்க் தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியான தகவல்:-

டெஸ்லா நிறுவனம் இந்த ஆண்டு இந்தியாவில் கால்பதிக்காது எனினும் அடுத்த ஆண்டில் உறுதியாக இந்தியாவில் கால்பதிக்கும் என்று ட்விட்டரில் 2019 மார்ச்சில் எலோன் மஸ்க் குறிப்பிட்டிருந்தார்.ஆனால் கொரோனாத் தொற்றால் உலகமே முடக்கிய நிலையில் எப்போது இந்தியாவுக்கு வரத் திட்டம் என்று ட்விட்டரில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அந்நிறுவன சிஇஓ எலோன் மஸ்க் கண்டிப்பாக அடுத்த ஆண்டு டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் கால்பதிக்கும் என்று கூறினார்.மேலும் அவர் டெஸ்லா நிறுவனத்திற்காக காத்திருந்ததற்கு நன்றி என்று  அதில் குறிப்பிட்டுள்ளார்.


	

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்