ஹாங்காங்கில் தேர்தல் ஒத்திவைப்பு.. 300 பேர் கைது.!

Default Image

ஹாங்காங்கின் சட்டமன்றத்திற்கான தேர்தல்களை ஒத்திவைப்பதாக அரசு அறிவித்தது. இந்த முடிவுக்கு எதிராக நேற்று போராட்டங்கள் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

சட்டமன்றத்திற்கான தேர்தல் நேற்று நடைபெறவிருந்தன, ஆனால், ஜூலை 31 அன்று தேர்தல் தலைமை நிர்வாகி கேரி லாம் அவர்கள் நடத்திய கூட்டத்திற்கு பிறகு பேசிய அவர், கொரோனா வைரஸ் காரணமாக தேர்தல் ஒத்திவைப்பதாக கூறினார்.

இந்த முடிவுக்கு எதிராக நேற்று போராட்டங்கள் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் சுமார் 270 பேர் கைது செய்யப்பட்டனர். புதிதாக இயற்றப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இதுபோன்ற கோஷங்கள் சட்டவிரோதமானது என்று போலீசார் தெரிவித்தனர்.

கவுலூனில் போராட்டக்கார்கள் மீது போலீசார் மிளகு பந்துகளை வீசியதாக தென் சீனா மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது. கவுலூன் தீபகற்பத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கான காவல்துறையினர் நிறுத்தப்பட்டனர். 300 பேரில் 169 ஆண்கள் மற்றும் 101 பெண்கள் ஆவார்.

மீதமுள்ளவர்கள் போலீஸ் அதிகாரிகளைத் தாக்கினர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். மேலும் இதுபோன்ற செயல்களால் கொரோனா வைரஸ் பரவுவதற்கான அபாயம் உள்ளதாகவும்,  வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக ஹாங்காங்கில் பொதுக் கூட்டங்களில் தற்போது இரண்டு நபர்களுக்கு மட்டுமே அனுமத்திக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
TVK Leader Vijay
gold price
India vs England 1st ODI
Rahul Dravid auto drier
DelhiElections 2025