ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத் நகருக்கு 33 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு.
இன்று ஆப்கானிஸ்தானில் அதிகாலையில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவானது. நிலநடுக்கத்திற்கான தேசிய மையத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, இன்று அதிகாலை 3.47 மணியளவில் ஆப்கானிஸ்தானின் பைசாபாத் நகருக்கு மேற்கே 33 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் இதுவரை உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை. முன்னதாக கடந்த சனிக்கிழமை ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அதன் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது. அப்போது காலை 10.17 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. சனிக்கிழமையன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் மையம் பைசாபாத்தில் இருந்து 145 கி.மீ தொலைவில் பதிவாகியுள்ளது.
இருப்பினும், இந்த நிலநடுக்கத்தின் போதும் எந்தவிதமான உயிர் மற்றும் பொருள் சேதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…