ரஜினி நடிப்பில் ஏ .ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “தர்பார்” இப்படம் நாளை முதல் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில் படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதிக்கக்கூடாது என வரதராஜன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கிறார். அவர் கொடுத்த புகாரில் தமிழக அரசு விதிமுறைப்படி விடுமுறை நாள்களில் மட்டுமே அனுமதி பெற்று அதாவது 5-வது காட்சியை காலை 9 மணிக்கு மட்டுமே திரையிட முடியும்.
ஆனால் சென்னையில் உள்ள பல திரையரங்குகளில் விடியற்காலை முதல் சிறப்பு காட்சிகள் திரையிட உள்ளனர். எனவே சிறப்புக் காட்சிக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என அவர் புகார் தெரிவித்து இருந்தார்.சிறப்பு காட்சிகள் திரையிட முறையான அனுமதி கேட்டால் அனுமதி கொடுக்கப்படும் என கடம்பூர் ராஜு கூறி இருந்தார்.
இந்நிலையில் தற்போது “தர்பார்” திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் படி 09,10,13 மற்றும் 14 ஆகிய நான்கு நாட்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…