துல்க்கர் சல்மான் சர்ச்சையால் சமூக வலைத்தளங்களிலிருந்து விலகும் பிரபல நடிகர்…!

Published by
Ragi

நடிகர் பிரசன்னா  சமூக வலைத்தளங்கள் அனைத்திலிருந்தும் விலக முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

துல்க்கர் சல்மான், மலையாள சினிமாவின் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர்.இந்த நிலையில் இவர் நடிப்பில் பிப்ரவரி மாதம் வெளியான வரனை ஆவிஷமுண்டோ திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் ஷோபனா, சுரேஷ் கோபி, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படத்தை படத்தை தற்போது ஆன்லைனிலும்  வெளியிடப்பட்டுள்ளது.இதில் சுரேஷ் கோபி வளர்க்கும் நாயின் பெயர் பிரபாகரன் என்று வைத்து அழைக்கப்பட்டது. இந்த காட்சிக்கு தமிழ் மக்கள் மத்தியில் துல்க்கருக்கு எதிராக பெரும் எதிர்ப்பு நிலவி வந்தது. அதனையடுத்து அவர் தமிழ் மக்கள் அனைவரிடமும் தனது நியாயத்தை விளக்கி மன்னிப்பு கேட்டிருந்தார்.

இதனையடுத்து பிரபல நடிகரான பிரசன்னா அவருக்கு ஆதரவாக பேசி விளக்கமளித்திருந்தார் . அதில் அவர் கூறியிருப்பதாவது, “ஆணியே புடுங்க வேணாம், என்ன கொடுமை சரவணா என்று நாம் பயன்படுத்தும் டயலாக்ஸ் போன்று அந்த பெயரும் ஒரு பிரபலமான பழைய திரைப்பட உரையாடலிருந்து எடுக்கப்பட்டது. அன்புள்ள மக்களே நான் அந்த பெயரில் இருக்கும் உணர்வுகளை புரிந்து கொள்கிறேன். ஆனால் தவறான புரிதலின் அடிப்படையில் வெறுப்பை பரப்ப கூடாது என்று கூறியுள்ளார். மேலும் மலையாள திரைப்படங்களை பார்த்த ஒரு தமிழன் என்ற முறையில், படத்தில் அது எந்த அர்த்தத்தில் சொல்லப்பட்டது என்று எனக்கு புரிகிறது. தவறான புரிதலுக்கும், தேவையற்ற அனைத்து துஷ்பிரயோகங்களுக்கும் துல்க்கரிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். சுரேஷ் கோபி படத்தில் புகழ்பெற்ற ‘ஓர்மாயுண்டோ ஈ முகம்’ என்ற வசனத்தை போலவே இந்த பெயரும் பயன்படுத்தப்பட்டதாக நான் காண்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

ஆனால் தற்போது இந்த சர்ச்சைகளுக்கு எதிராக துல்க்கரை கண்டித்து வருவதோடு அவரின் குடும்பத்தையும் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது மட்டுமின்றி தற்போது துல்க்கருடன் நடிகர் பிரசன்னாவையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர், மேலும் அவரது குடும்பத்தையும் இந்த விவகாரத்தில் இருப்பதை கண்டு வருத்தத்தில் உள்ளாராம் பிரசன்னா. இதனால் அவர் சமூக வலைத்தளங்கள் அனைத்திலிருந்தும் விலக முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Published by
Ragi

Recent Posts

டாஸ்மாக் விவகாரம் : வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரிய தமிழக அரசின் மனு வாபஸ்!

டாஸ்மாக் விவகாரம் : வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரிய தமிழக அரசின் மனு வாபஸ்!

சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர்…

44 minutes ago

திருடப்படும் தகவல்…சீன சிப்செட் அச்சுறுத்தல்! இந்தியாவில் பழைய சிம் கார்டுகளை மாற்ற திட்டம்?

டெல்லி : இந்திய அரசு, நாடு முழுவதும் உள்ள மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் பழைய சிம் கார்டுகளை மாற்றுவது பற்றி…

1 hour ago

KKR vs LSG : டாஸ் வென்ற கொல்கத்தா! பேட்டிங்கிற்கு தயாரான லக்னோ!

கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…

2 hours ago

ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம் கிடைக்குமா? சட்டப்பேரவையில் சிரிப்பலை கேள்வி!

சென்னை : மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறை சார்பான கோரிக்கைகளுக்கு…

2 hours ago

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…

2 hours ago

மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…

2 hours ago