துல்க்கர் சல்மான் சர்ச்சையால் சமூக வலைத்தளங்களிலிருந்து விலகும் பிரபல நடிகர்…!

Published by
Ragi

நடிகர் பிரசன்னா  சமூக வலைத்தளங்கள் அனைத்திலிருந்தும் விலக முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

துல்க்கர் சல்மான், மலையாள சினிமாவின் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர்.இந்த நிலையில் இவர் நடிப்பில் பிப்ரவரி மாதம் வெளியான வரனை ஆவிஷமுண்டோ திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் ஷோபனா, சுரேஷ் கோபி, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படத்தை படத்தை தற்போது ஆன்லைனிலும்  வெளியிடப்பட்டுள்ளது.இதில் சுரேஷ் கோபி வளர்க்கும் நாயின் பெயர் பிரபாகரன் என்று வைத்து அழைக்கப்பட்டது. இந்த காட்சிக்கு தமிழ் மக்கள் மத்தியில் துல்க்கருக்கு எதிராக பெரும் எதிர்ப்பு நிலவி வந்தது. அதனையடுத்து அவர் தமிழ் மக்கள் அனைவரிடமும் தனது நியாயத்தை விளக்கி மன்னிப்பு கேட்டிருந்தார்.

இதனையடுத்து பிரபல நடிகரான பிரசன்னா அவருக்கு ஆதரவாக பேசி விளக்கமளித்திருந்தார் . அதில் அவர் கூறியிருப்பதாவது, “ஆணியே புடுங்க வேணாம், என்ன கொடுமை சரவணா என்று நாம் பயன்படுத்தும் டயலாக்ஸ் போன்று அந்த பெயரும் ஒரு பிரபலமான பழைய திரைப்பட உரையாடலிருந்து எடுக்கப்பட்டது. அன்புள்ள மக்களே நான் அந்த பெயரில் இருக்கும் உணர்வுகளை புரிந்து கொள்கிறேன். ஆனால் தவறான புரிதலின் அடிப்படையில் வெறுப்பை பரப்ப கூடாது என்று கூறியுள்ளார். மேலும் மலையாள திரைப்படங்களை பார்த்த ஒரு தமிழன் என்ற முறையில், படத்தில் அது எந்த அர்த்தத்தில் சொல்லப்பட்டது என்று எனக்கு புரிகிறது. தவறான புரிதலுக்கும், தேவையற்ற அனைத்து துஷ்பிரயோகங்களுக்கும் துல்க்கரிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். சுரேஷ் கோபி படத்தில் புகழ்பெற்ற ‘ஓர்மாயுண்டோ ஈ முகம்’ என்ற வசனத்தை போலவே இந்த பெயரும் பயன்படுத்தப்பட்டதாக நான் காண்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

ஆனால் தற்போது இந்த சர்ச்சைகளுக்கு எதிராக துல்க்கரை கண்டித்து வருவதோடு அவரின் குடும்பத்தையும் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது மட்டுமின்றி தற்போது துல்க்கருடன் நடிகர் பிரசன்னாவையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர், மேலும் அவரது குடும்பத்தையும் இந்த விவகாரத்தில் இருப்பதை கண்டு வருத்தத்தில் உள்ளாராம் பிரசன்னா. இதனால் அவர் சமூக வலைத்தளங்கள் அனைத்திலிருந்தும் விலக முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Published by
Ragi

Recent Posts

தேன் கூட்டில் கை வைக்காதீர்கள்., மொழியால் பிரிந்த நாடுகள் இங்கு இருக்கிறது! மு.க.ஸ்டாலின் பரபரப்பு கடிதம்!

தேன் கூட்டில் கை வைக்காதீர்கள்., மொழியால் பிரிந்த நாடுகள் இங்கு இருக்கிறது! மு.க.ஸ்டாலின் பரபரப்பு கடிதம்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தி மொழி திணிப்பு குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை…

1 hour ago

“ராஜ்யசபா சீட் ஓகே., கமலுக்கு வாழ்த்துக்கள்! முதலமைச்சர் பொய் சொல்கிறார்!” அண்ணாமலை கடும் விமர்சனம்!

சென்னை : மக்கள்தொகை அடிப்படையில் மக்களவை தொகுதியில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு முயற்சி மேற்கொள்வதாக கூறப்படுகிறது. அவ்வாறு மேற்கொள்ளும்போது…

2 hours ago

SA vs NZ : இறுதிவரை போராடிய தென் ஆப்பிரிக்கா! இறுதி போட்டிக்குள் நுழைந்த நியூசிலாந்து!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள்…

11 hours ago

ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!

வாஷிங்டன் : அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் ப்ளூ கோஸ்ட் மிஷன் 1 கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்…

13 hours ago

தற்கொலை முயற்சி அல்ல.. மருத்துவமனையில் பாடகி கல்பனா.! மகள் சொன்ன அதிர்ச்சி தகவல்!

ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வந்த கல்பனா அளவுக்கு அதிகமான…

14 hours ago

SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்ரேலியா அணியை வீழ்த்தி…

15 hours ago