திருச்செங்கோட்டில் முதலமைச்சர் துவக்கி வைத்த குடிநீர் திட்டப்பணிகள் விரைவில் முடியும்- அமைச்சர் தங்கமணி….!!

Default Image

குமாரபாளையம் மற்றும் திருச்செங்கோட்டில் 400 கோடி ரூபாய் மதிப்பில், முதலமைச்சர் தொடங்கி வைத்த கூட்டு குடிநீர் திட்ட பணிகள் விரைவில் முடியும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள ஆனங்கூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்திற்கான புதிய நவீன அலுவலகக் கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது. இதில் மின்சாரத்துறை அமைச்சர் கலந்து கொண்டு, கட்டடத்தை திறந்து வைத்தார். இதனைதொடர்ந்து, ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சி நிதியின் கீழ் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கூட்டுறவு வங்கியில் உரக்கிடங்கு அமைக்கும் பணிகளை அவர் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவ்விழாவில் பேசிய அவர், நாமக்கல் மாவட்டத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 450 கோடி ரூபாய் அளவிற்கு அரசின் திட்டப் பணிகள் நடைபெற்றுள்ளதாக கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்