மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் வசித்து வருபவர் சத்தியவான் கீதே. இவர் அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரின் ஆட்டோவில் பயணிக்க அங்குள்ள மக்கள் மிகவும் விரும்புவார்கள். ஏனெனில், அவர் தனது ஆட்டோவில் பல வசதிகளை செய்துள்ளார்.
அதில், மொபைல் போன் சார்ஜ் செய்வதற்கான ஹோல்டர், டெஸ்க்டாப் கணினி வசதி, குடிப்பதற்கு குடிநீர், முகம் மற்றும் கை கழுவுவதற்கான வாஷ் பேசின் மற்றும் கூலர் உள்ளிட்ட வசதிகளை அமைத்துள்ளார். மேலும், இதற்க்கு அவர் எந்த விதமான கட்டணமும் வசுலிப்பதில்லை. இதனால் பயணிகள் இவரது ஆட்டோவில் பயணிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேலும் இவர், தனது ஆட்டோவில் ஒரு குட்டி மானிட்டரையும் வைத்துள்ளார். அதன்மூலம் பயணிகள் படம் மற்றும் பாடல்கள் கேட்டுக்கொண்டே பயணிக்கலாம். மேலும் அவர், மூத்த குடிமக்களுக்கு ஒரு கீ.மீ. வரை கட்டணம் வசூலிப்பதில்லை.
மேலும், இதுகுறித்து சத்யவான் செய்தியாளர்களிடம் கூறுகையில், “எனது ஆட்டோவில் செல்போன் சார்ஜ் செய்யும் வசதி, சுத்தமான குடிநீர், வாஷ் பேசின் போன்ற அனைத்து வசதிகளும் உண்டு. மேலும், மூத்த குடிமக்களுக்கு ஒரு கீ.மீ. வரை கட்டணம் வசூலிப்பதில்லை. பயணிகளுக்காக சிறப்பான சேவையை வழங்கும் நோக்கத்தோடு இதனை செய்துள்ளேன் என கூறினார்.
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…