பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தோன்றி இந்த வாரம் இரண்டு பேர் வெளியேற உள்ளதாகவும் , ஒருவர் இன்று வெளியேறுவார் என்றும் அறிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியானது நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இன்று சனிக்கிழமை என்பதால் பல பிரச்சனைகளுக்கு தீர்வை கமல் கூறுவார் என்றும்,பலரை வச்சு செய்வார் என்றும் கூறப்படுகிறது.அதனுடன் எலிமினேஷனும் நடைபெறவுள்ளது.இந்த வார நாமினேஷனில் ரம்யா பாண்டியன், கேப்ரியலா, ஷிவானி, ஜித்தன் ரமேஷ், சோம், நிஷா ஆகியோர் தேர்வாகியுள்ளனர் .இதில் குறைவான வாக்குகளை பெற்ற நபர் வெளியேறுவது வழக்கம் .இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இரண்டு பேர் வெளியாக உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி வருகிறது.
அதனை கமல்ஹாசன் உறுதிப்படுத்தி உள்ளார் . தற்போது வெளியான பர்ஸ்ட் புரோமோவில், கமல்ஹாசன் தோன்றி பலமுறை சொல்லிட்டேன் , ஜோடியாக விளையாடினால் ஜோடியாக வெளியேற வேண்டியிருக்கும்,கூட்டமாக விளையாடினால் கூண்டோடு கைலாசம் தான்,ஆனால் அவர்கள் கேட்டபாடில்லை .நான் கேள்விப்பட்ட வரையில் இந்த வாரம் இரண்டு எவிக்ஷன் அதில் ஒன்றை இன்றே செய்வோம் என்று கூறுகிறார்.எனவே இந்த வாரம் நாமினேட் ஆன ஆறு போட்டியாளர்களில் யார் யார் வெளியேற்றப்படுவார் என்ற கேள்வி பார்வையாளர்களிடையே எழுந்துள்ளது.
டெல்லி : தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…
சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…
சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…