#Breaking:காபூலில் இரட்டை குண்டு வெடிப்புகள்:19 பேர் பலி,50 பேர் படுகாயம் – தகவல்..!

Published by
Edison

காபூலில் இரண்டு குண்டு வெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டதாகவும் மற்றும் 50 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள சர்தார் முகமது தாவுத் கான் ராணுவ மருத்துவமனை மற்றும் அதன் அருகே இன்று இரண்டு குண்டு வெடிப்பு வெடிச்சத்தம் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு சத்தமும் கேட்டதாகவும்,சாட்சியங்கள் சிலர் செய்தி ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.மேலும்,காபூலில் நிகழ்ந்த இரண்டு குண்டுவெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 50 பேர் படுகாயமடைந்தனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

“நான் மருத்துவமனைக்குள் இருக்கிறேன்.முதல் சோதனைச் சாவடியில் இருந்து ஒரு பெரிய வெடிப்புச் சத்தம் கேட்டது. நாங்கள் பாதுகாப்பான அறைகளுக்குச் செல்லுமாறு கூறப்பட்டோம். துப்பாக்கிச் சூடு சத்தமும் கேட்கிறது,” என்று சர்தார் முகமது தாவுத் கான் மருத்துவமனையின் மருத்துவர் செய்தி நிறுவனமான AFP இடம் கூறியுள்ளார்.

அமெரிக்க ஆதரவு அரசாங்கத்திற்கு எதிராக இரண்டு தசாப்த கால கிளர்ச்சியைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து அவ்வப்போது துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்,காபூலில் இரண்டு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.அதனைத் தொடர்ந்து,துப்பாக்கிசூடும் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இரண்டு குண்டுவெடிப்புகளையும் தலிபான் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.

மேலும்,”இராணுவ மருத்துவமனையின் வாயிலில் ஒரு வெடிப்பு நிகழ்ந்துள்ளது, இரண்டாவது மருத்துவமனைக்கு அருகில் வெடித்துள்ளது, இது எங்களின் ஆரம்ப தகவல், மேலும் விவரங்களை பின்னர் வழங்குவோம்” என்று அவர் AFP இடம் கூறினார்.

 இந்த குண்டுவெடிப்புக்கான காரணம் என்ன?, இது பயங்கரவாத தாக்குதலா? என்பது குறித்து தலிபான் அதிகாரிகளிடம் இருந்து இதுவரை எந்த கருத்தும் வெளிவரவில்லை.மேலும்,இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு குழுவும் உரிமை கோரவில்லை.

இதற்கு முன்னதாக மருத்துவமனை 2017 இல் தாக்கப்பட்டது,அப்போது, துப்பாக்கி ஏந்தியவர்கள் மருத்துவ பணியாளர்கள் போல் மாறுவேடமிட்டு குறைந்தது 30 பேரைக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்தியா! வீரர்களுக்கு பிசிசிஐ கொடுத்த கிஃப்ட்!

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்தியா! வீரர்களுக்கு பிசிசிஐ கொடுத்த கிஃப்ட்!

டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…

11 minutes ago

மேலும் 487 இந்தியர்களை நாடுகடத்த அமெரிக்கா திட்டம்! விக்ரம் மிஸ்ரி சொன்ன தகவல்!

அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக  104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…

49 minutes ago

அடிமேல் அடி…லைக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த விடாமுயற்சி! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…

1 hour ago

இத்தனை நாளு எங்கய்யா இருந்த? ஸ்ரேயாஸ் ஐயரை புகழ்ந்து தள்ளிய ரிக்கி பாண்டிங்!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …

2 hours ago

கந்தூரி விழா : காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை (08.02.2025) உள்ளூர் விடுமுறை!

புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை  என மாவட்ட புதுச்சேரி…

4 hours ago

மாநிலங்களுக்கு மத்திய அரசு தரும் அல்வாதான் இப்போ ஃபேமஸ்! முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

திருநெல்வேலி : முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று (7.2.2025) திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில், 75,151 பயனாளிகளுக்கு 167 கோடி ரூபாய்…

4 hours ago