#Breaking:காபூலில் இரட்டை குண்டு வெடிப்புகள்:19 பேர் பலி,50 பேர் படுகாயம் – தகவல்..!

Published by
Edison

காபூலில் இரண்டு குண்டு வெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டதாகவும் மற்றும் 50 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள சர்தார் முகமது தாவுத் கான் ராணுவ மருத்துவமனை மற்றும் அதன் அருகே இன்று இரண்டு குண்டு வெடிப்பு வெடிச்சத்தம் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு சத்தமும் கேட்டதாகவும்,சாட்சியங்கள் சிலர் செய்தி ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.மேலும்,காபூலில் நிகழ்ந்த இரண்டு குண்டுவெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 50 பேர் படுகாயமடைந்தனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

“நான் மருத்துவமனைக்குள் இருக்கிறேன்.முதல் சோதனைச் சாவடியில் இருந்து ஒரு பெரிய வெடிப்புச் சத்தம் கேட்டது. நாங்கள் பாதுகாப்பான அறைகளுக்குச் செல்லுமாறு கூறப்பட்டோம். துப்பாக்கிச் சூடு சத்தமும் கேட்கிறது,” என்று சர்தார் முகமது தாவுத் கான் மருத்துவமனையின் மருத்துவர் செய்தி நிறுவனமான AFP இடம் கூறியுள்ளார்.

அமெரிக்க ஆதரவு அரசாங்கத்திற்கு எதிராக இரண்டு தசாப்த கால கிளர்ச்சியைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து அவ்வப்போது துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்,காபூலில் இரண்டு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.அதனைத் தொடர்ந்து,துப்பாக்கிசூடும் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இரண்டு குண்டுவெடிப்புகளையும் தலிபான் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.

மேலும்,”இராணுவ மருத்துவமனையின் வாயிலில் ஒரு வெடிப்பு நிகழ்ந்துள்ளது, இரண்டாவது மருத்துவமனைக்கு அருகில் வெடித்துள்ளது, இது எங்களின் ஆரம்ப தகவல், மேலும் விவரங்களை பின்னர் வழங்குவோம்” என்று அவர் AFP இடம் கூறினார்.

 இந்த குண்டுவெடிப்புக்கான காரணம் என்ன?, இது பயங்கரவாத தாக்குதலா? என்பது குறித்து தலிபான் அதிகாரிகளிடம் இருந்து இதுவரை எந்த கருத்தும் வெளிவரவில்லை.மேலும்,இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு குழுவும் உரிமை கோரவில்லை.

இதற்கு முன்னதாக மருத்துவமனை 2017 இல் தாக்கப்பட்டது,அப்போது, துப்பாக்கி ஏந்தியவர்கள் மருத்துவ பணியாளர்கள் போல் மாறுவேடமிட்டு குறைந்தது 30 பேரைக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

மனைவி கண்முன்னே ரவுடி வெட்டிக்கொலை! 3 பேர் மீது போலீஸ் என்கவுண்டர்! 

மனைவி கண்முன்னே ரவுடி வெட்டிக்கொலை! 3 பேர் மீது போலீஸ் என்கவுண்டர்!

ஈரோடு : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று…

4 minutes ago

வீர தீர சூரன் இப்படி தான் இருக்கும்! உண்மையை போட்டுடைத்த எஸ்.ஜே. சூர்யா!

சென்னை : தங்கலான் படம் எதிர்பார்த்த அளவுக்கு மக்களுக்கு மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை என்கிற காரணத்தால் அடுத்ததாக நடிகர்…

26 minutes ago

நாக்பூர் கலவரம் : முக்கிய புள்ளியை தூக்கிய போலீசார்..யார் இந்த பாஹிம் கான் ?

மகாராஷ்டிரா :  மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வெடித்த வன்முறையானது பெரிய அளவில் பேசுபொருளாக வெடித்திருக்கிறது. சாம்பாஜி நகரிலுள்ள அவுரங்கசீப் கல்லறையை அகற்றவேண்டுமென…

1 hour ago

டிஜிட்டல் முறையில் பார்க்கிங் வசதி…சென்னை மாநகராட்சி பட்ஜெட்டின் அறிவிப்புகள்!

சென்னை : மாநகராட்சியின் 2025-26ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று (மார்ச்19) தாக்கல் செய்தார். சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற…

2 hours ago

“நான் பாத்துக்குறேன் பங்கு”..மும்பை கேப்டனாகும் சூரியகுமார் யாதவ்! பாண்டியாவுக்கு BCCI செக்?

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் மிகவும் ரசிகர்கள் எதிர்பார்கும்…

2 hours ago

மஞ்சள் நிற ரேஷன் கார்டு., குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000! புதுச்சேரி முதலமைச்சர் அறிவிப்பு!

புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் மாநில நிதிநிலை அறிக்கை 2025 2026 சில தினங்களுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்டது. அதனை…

2 hours ago