கிரிக்கெட்:போட்டிகளில் இனி ஸ்மார்ட் வாட்ச் அணிய கூடாது.!-கிரிக்கெட் கவுன்சில் எச்சரிக்கை..!!

Default Image

கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் போது ஸ்மார்ட் வாட்சுகளை அணிய வேண்டாம் என பாகிஸ்தான் வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.  இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பாபர் அசாம் மற்றும் ஆசாத் ஷபீக் ஆகியோர் ஸ்மார்ட் வாட்சுகளை அணிந்தவாறு காட்சியளித்தனர். இதனையடுத்து விளையாட்டின் போது வீரர்கள் தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருக்க அனுமதி இல்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், கிரிக்கெட் சூதாட்ட புகார்களை தவிர்க்க ஸ்மார்ட் வாட்சுகளை அணிய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்