பழைய சாக்ஸ் இருந்தா இனி தூக்கி போடாதீங்க…!

Published by
Rebekal

குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருமே அதிகளவில் தற்பொழுது சாக்ஸ் பயன்படுத்துகிறார்கள். இந்த சாக்ஸை கொஞ்ச நாட்கள் தான் பயன்படுத்த முடிகிறது. பாதங்களில் அதிக நேரம் இருப்பதால் அடிக்கடி இதை மாற்ற வேண்டி உள்ளது அல்லது கிழிந்து விடுகிறது. இது போன்ற கிழிந்த சாக்ஸுகளை, பழைய சாக்ஸுகளை தூக்கி எரிந்து விடுகிறோம். ஆனால், இனி தூக்கி ஏரியாதீர்கள். கிழிந்த சாக்ஸுகளை பல விதமாக நாம் பயன்படுத்தி கொள்ளலாம். அவற்றில் சிலவற்றை இன்று அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

எண்ணெய் டப்பா

எவ்வளவு தான் விலை கொடுத்து மாடலாக அழகாக வாங்கினாலும் எண்ணெய் டப்பாவிலுள்ள கசிவுகள் மட்டும் பலருக்கு தீராத பிரச்சனையாக இருக்கும். ஒவ்வொரு முறையும் கையிலெடுக்கும் பொழுது எண்ணெய் கைகளில் ஒட்டி கொள்ளும், சமையல் கட்டிலும் எண்ணெய் பிசுக்கு இருக்கும். ஆனால், இந்த சாக்ஸுகளை கிழிந்த பக்கத்தில் மேலும் கீழுமாக வெட்டி விட்டு, எண்ணெய் டப்பாவுக்கு உரை போல போட்டு வைத்துக்கொண்டால் எண்ணெய் கசிவு இருந்தாலும், கைகளில் எண்ணெய் படாது.

கைப்பை பர்ஸ்

பெண்கள் கைப்பை தான் அதிகளவில் உபயோகிப்பார்கள். கைப்பையில் தனி தனி அறைகளாக பைகள் இருந்தாலும் சில்லறைகள் போட்டு வைக்க ஒரு பர்ஸ் வைத்திருப்போம். இதற்க்கு பதிலாக  சாக்ஸுகளின் மேற்புற துளையிலிருந்து உருட்டி அதில் ஒரு பட்டன் போட்டு வைத்துக்கொண்டால் கைபைகளில் சில்லறைகளை போட்டு வைக்க உதவும்.

நாப்கின்ஸ்

இளம் பெண்கள் வெளி இடங்களுக்கு செல்லும் பொழுது மாதவிடாய் காலங்களில் உபயோகப்படுத்தும் சானிடரி நாப்கின்கள் கடைகளில் வாங்க கூச்சப்படுவார்கள். இதற்கு பதிலாக நமது கைபைகளில் ஒரு நாப்கின் எப்பொழுதும் வைத்து கொள்வது நல்லது. இது சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதால் சாக்ஸுகளுக்குள் போட்டு வைத்து கொள்ளலாம். பாதுகாப்பாகவும் இருக்கும், பிறர் நமது பைகளை தொட்டாலும் அச்சப்பட வேண்டி இருக்காது.

தண்ணீர் பாட்டில்

குழந்தைகள் விளையாடுவதற்காக வெளியில் செல்லும் பொழுது கைகளில் தண்ணீர் பாட்டில்களை கொடுத்து விடுவோம். அப்பொழுது சாக்சின் மேற்புறத்தில் இருபுறமும்ப்லெஸாக துளையிட்டு சுற்றி நூல் வைத்து தைத்தால் குழந்தைகள் கையில் கொண்டு செல்லும் கைப்பை போல உபயோகப்படுத்தலாம். சைக்கிள்களில் செல்லும் குழந்தைகள் தொங்க விட்டு கொண்டு செல்லலாம்.

Published by
Rebekal

Recent Posts

”பஹல்காம் தாக்குதலுக்கு தங்களுக்கும் தொடர்பில்லை” – பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்.!

”பஹல்காம் தாக்குதலுக்கு தங்களுக்கும் தொடர்பில்லை” – பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்.!

நாட்டையே உலுக்கிய ஜம்மு-காஷ்மீர் பாஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கர பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஒரு நாள் கழித்து, பாகிஸ்தான்…

13 minutes ago

பாஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேரின் விவரங்கள்.!

ஸ்ரீநகர் : இந்தியர்களுக்கு மற்றுமொரு கருப்பு நாளாக காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் அமைந்திருக்கிறது. ஆம், நேற்றைய தினம் ஜம்மு…

1 hour ago

பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகள்? விமானம் மூலம் தேடுதல் வேட்டையில் இந்திய ரானுவம்!

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…

2 hours ago

Live : ஜம்மு காஷ்மீர் தாக்குதல் முதல்…அரசியல் நிகழ்வுகள் வரை!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…

2 hours ago

தேனிலவு கொண்டாட வந்த கடற்படை அதிகாரி..சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள்…இதயத்தை நொறுக்கும் புகைப்படம்!

ஸ்ரீநகர் :  ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில், திருமணமாகி வெறும் மூன்று…

2 hours ago

PahalgamAttack : ஜம்மு காஷ்மீர் தாக்குதல்…மனதை உலுக்கும் காட்சிகள்!

ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பராபரையும்…

3 hours ago