நடிகை அமலா பாலின் நிச்சியதார்த்த புகைப்படங்களை வெளியிட தடை.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

Default Image

நடிகை அமலா பாலின் நிச்சயதார்த்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட பவ்னிந்தர் சிங்கிற்கு தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை அமலா பால், இயக்குனர் ஏ.எல்.விஜயுடன் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். சில தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக இருவரும் விவாகரத்து செய்துகொண்ட நிலையில், ஏ.எல்.விஜய் மற்றொருவரை திருமணம் செய்துகொண்டார். இதன்காரணமாக நடிகை அமலா பால், பாடகர் பவ்னிந்தர் சிங்கை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் என அண்மையில் தகவல்கள் வெளியானது.

மேலும் பவ்னிந்தர் சிங், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் மூலம் அவர் நிச்சியதார்தம் செய்துகொண்டதாக அதிகளவில் செய்திகள் பரவத் தொடங்கியது. இந்தநிலையில், அமலா பாலுடன் திருமண கோலத்துடன் இருக்கும் புகைப்படத்தை பவ்னிந்தர் சிங் வெளியிட்டுள்ளார். வெளியிட்ட சிறிது நிமிடங்களில் அந்த பதிவை நீக்கியது, குழப்பத்தை ஏற்படுத்தியது.

தனது அனுமதியின்றி, தங்களுக்கு திருமணம் ஆனதாக கூறி புகைப்படங்களை வெளியிட்டதாக பவ்னிந்தர் சிங் மீது வழக்கு தொடர அனுமதிக்ககோரி அமலாபால் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார்கள். இதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்த காரணமாக, அமலா பால் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், நடிகை அமலா பாலின் நிச்சயதார்த்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட பவ்னிந்தர் சிங்கிற்கு தடை விதித்து, உத்தரவிட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Joe Root
erode by election 2025
edappadi palanisamy mk stalin
R Ashwin -- Virat kohli
abhishek sharma varun chakravarthy
vidaamuyarchi anirudh