பேஸ்புக்கில் தவறான பதிவுகளை லைக், கமெண்ட், ஷேர் செய்பவர்களுக்கு எச்சரிக்கை தகவலை அனுப்ப அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸை எதிர்த்து உலக நாடுகள் அனைத்தும் போராடி வருகிறது. கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதில் கொரோனா குறித்த தகவல் மற்றும் விழிப்புணர்வுகள் உள்ளிட்டவைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் உள்ளன. அதே நேரத்தில் தொடர் வதந்திகளும் வேகமாக பரவி வருகிறது. இதுபோன்ற பொய்யான தகவல் மக்களிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில், கொரோனா குறித்த பொய்யான தகவல்களை கட்டுப்படுத்த பேஸ்புக் நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் கொரோனாவை குறித்து பரவும் வதந்திகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில், தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, கொரோனா தொடர்பான தவறான பதிவுகளை லைக், கமெண்ட், ஷேர் செய்பவர்களுக்கு எச்சரிக்கை தகவலை அனுப்ப பேஸ்புக் முடிவு செய்துள்ளது. மேலும் இந்த நடவடிக்கை விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேஸ்புக் நிறுவனம் கூறுகையில், பேஸ்புக் முற்றிலும் தவறான ஆபத்துகளை ஏற்படுத்தும் கொரோனா தொடர்பான பல்லாயிரக்கணக்கான பதிவுகளை நீக்கியுள்ளதாகவும், சந்தேகத்திற்குரிய மில்லியன் கணக்கான பதிவுகளுக்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதுபோன்று தவறான தகவலை பரப்பினால் மக்களிடையே பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்த அதிக வாய்ப்பு இருப்பதாக கூறி, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…